" ஏய்! அளந்து பேசு! போலீஸ் கமிஷனருக்கு போன் பண்ணி, இங்கே வரவழைச்சிடுவேன்.......!"
" போலீஸ் கமிஷனரை உங்களுக்கு நல்லா தெரியுமாம்மா? முன்னேபின்னே அவரை பார்த்திருக்கீங்களாம்மா? அவரு பெயர் என்னம்மா?"
" நீங்க வம்பு பண்றதுக்குன்னே வந்திருக்கீங்க, வேற வழியில்லே, கமிஷனருக்கு இப்பவே போன் பண்றேன்...."
இரும்மா! அவர் நம்பரை நானே போட்டுத்தரேன், பேசும்மா! நான் இங்கேயே இருக்கேம்மா!"
கண்ணகி என்ன செய்வதென தெரியாமல் விழித்தாள்!
" ஏம்மா, விழிக்கிறே? பேசும்மா!"
" எனக்கு அவரிடம் எப்போ, என்ன பேசணும்னு தெரியும்! நீங்க கிளம்புங்க!" என்று கடுப்புடன் பேசிவிட்டு, கதவை மூட முயன்றாள்!
அந்த நபர், படியேறி வந்து, சிரித்துக்கொண்டே,
" நான்தாம்மா, கமிஷனர் ரஞ்சித்! உங்களிடம் கொஞ்சம் பேசணும்!" என்றதும், கண்ணகி வெலவெலத்துப் போய், அவரை நாற்காலியில் அமர்த்தி, " குடிக்க தண்ணீர் கொண்டுவரேன்" என்றாள்.
" வேண்டாம், வேண்டாம்! ஒரு சின்ன தகவல் நீங்க சொன்னால் போதும், நான் போயிடறேன், சகாதேவனை நீங்க அவன் விடுதலையான அன்று, சந்தித்து இங்கே உங்களுடன் அழைத்தது வந்தது தெரியும், இங்கே இருப்பான்னு நினைச்சு வந்தேன், எப்போ போனான், எங்கே போனான்னு தெரியுமாம்மா?"
" இன்று காலையிலேதான் போனாரு! கால்போன போக்கிலே போறேன்னு சொன்னாரு....."
" யாரையாவது பார்க்கப் போறதா சொன்னாராம்மா?"
" இல்லையே....."
" சரிம்மா! வரேம்மா! கதவை தாள் போட்டுக்கம்மா! யார் வந்தாலும் திறக்காதேம்மா, நான்தான் போலீஸ் கமிஷனர் ரஞ்சித்னு பொய் சொல்லி உள்ளே நுழைவாங்க, என்னை மாதிரி!"
" அடப்பாவி! அப்ப நீ கமிஷனர் இல்லையா?"
" நான் பிரைவேட் டிடெக்டிவ் விசுவநாதன்! வரேம்மா!"
சிரித்துக்கொண்டே வெளியேறிய டிடெக்டிவ், அடுத்து எங்கே போவது? என்று யோசித்தான்!
கொரோனா ஊரடங்கு உத்தரவினால், ஊரே வெறித்துக் கிடந்தது, மௌனமாக!
யாரிடமாவது விசாரிக்கலாம் என்பதற்கு, ஈ, காக்கா கூட வெளியில் தெரியவில்லை!
டூவீலரை மெதுவாக ஓட்டிக்கொண்டே தெருமுனைக்கு வந்தார்.