தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 17 - ராசு
தேவிகா தன் அறையில் அமர்ந்திருந்தாள். அவள் மனம் இங்கில்லை. நடந்ததையே நினைத்து வருந்தி கொண்டிருந்தாள். தோழிக்கு உதவுவதாக நினைத்து அவளுக்கு வேதனையைத் தந்துவிட்டோமே என்று வருந்தினாள்.
அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. புகைப்படத்தில் மோகனப்பிரியாவைக் காட்டி இவள்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போகிற பெண் என்றதும் ராஜ்பரத்தின் முகம் எப்படி மலர்ந்தது என்று நினைத்துப் பார்க்கும்போது மகனுக்கு அவளை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை அவள் புரிந்துகொண்டுவிட்டாள்.
தோழியிடம் அவள் அவளுடைய மகளை மருமகளாக்கிக் கொள்கிறேன் என்றாள்தான். அதற்காக ... கா இதை எதிர்பார்க்கவில்லை. அவளுடைய இரண்டு பெண்களுக்குமே திருமணம் நடக்கப்போவதை எண்ணி தோழி மகிழ்வாள் என்று நினைத்தால் அவளோ தன் தலையில் கல்லைத் தூக்கிப்போடுவது போல் கூறிவிட்டாளே.
This story is now available on Chillzee KiMo.
...