சமயத்திலே உதவி செய்ய எனக்கு சந்தர்ப்பம் தேடிவந்தது, என்மீது அந்த மகாசக்திக்கு உள்ள பாசமா நான் ஏத்துக்கறேன்......உங்க மகனிடமிருந்து ஏதாவது தகவல் உண்டா? சின்னக் குழந்தைக்கு காய்ச்சல் குறைஞ்சிடுத்தா?"
அப்போது, பெரியவருக்கு போன் அழைப்பு வந்தது!
பேசிவிட்டு சந்தோஷமாகச் சொன்னார்:
" ஐயா! உங்க மனசு தங்கமான மனசுய்யா! நீங்க கேட்டு வாய் மூடலை, அதற்குள் என் மகன் சந்தோஷமா தகவல் தரான், குழந்தைக்கு சாதாரண காய்ச்சல்தான், கொரோனா பாதிப்பு இல்லே, குணமாயிடுத்தாம், இன்னிக்கி டிஸ்சார்ஜ் பண்றாங்களாம், மகனும் மருமகளும் குழந்தையை எடுத்துக்கிட்டு வீடு திரும்பிடுவாங்க! நாங்களும் இனிமேல் எங்களை தனிமைப்படுத்திக்க வேண்டாம், நீங்களும், வீட்டு உள்ளே தாராளமா வரலாம்" என்று சொல்லிக்கொண்டே, கதவைத் திறந்து வெளியே வந்தவர், சகாதேவனின் காலைத் தொட்டு வணங்கினார்.
சகாதேவன் பதறினார்.
" என்ன இப்படியெல்லாம் பண்றீங்க? உங்க மகன் வீடு திரும்புகிற வரையிலுமாவது நான் இங்கே இருப்பதா, வேண்டாமா?"
பெரியவர் சகாதேவனை உச்சி முகர்ந்து, கண்ணீருடன் பேசினார்.
" ஐயா! நீங்க யார் பெற்ற பிள்ளையோ? உங்க பெயர்கூட தெரிஞ்சிக்காம, என்மகன் உங்களைப் பார்த்தவுடனேயே, உங்கபேரிலே முழு நம்பிக்கை வைத்து எங்களை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போனான், அவனைவிட நீங்க உயர்ந்து நின்னு, உங்க பணத்திலே எங்களுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு வாங்கித் தந்து, எங்க வீட்டு வாசற்படியிலேயே தலைவைத்துப் படுத்து எங்களை பார்த்துக்கிட்டீங்க! இந்த அதிசயத்தை என்னன்னு சொல்றது? அந்தப் பெரியவர் சொன்னமாதிரி, எங்க இல்லத்திலே வாழற முதியோரின் ஆசிர்வாதம்தான்! சந்தேகமேயில்லை....."
தொடரும்...
Next episode will be published on 11th Aug. This series is updated weekly on Tuesday mornings.