தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 01 - ஜெபமலர்
கதைகளை எழுதுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்த சில்சீ குழுமத்திற்கு முதலாவது என் நன்றி. இது என்னுடைய ஐந்தாவது கதை. மற்ற கதைகளைப் போல இந்த கதையையும் படித்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கதையைப் பற்றி...
சராசரி பெண்களைப்போல படிப்பு வேலை காதல் என்று சுற்றி வருகிறாள் நம் கதாநாயகி. திடீரென்று அவளுடைய கடந்த காலத்தை பற்றி சில தகவல்கள் கிடைக்கின்றன. தன் பெற்றோர்கள் யார் என்று தேடுபவளுக்கு பல திகிலூட்டும் சம்பவங்கள் காத்திருக்கிறது. தன் பெற்றோர்கள் யார்? என்ன ஆனார்கள் என்பதை கண்டுபிடித்தாளா? தன் காதலனோடு இணைந்தாளா? என்பதே கதை. காதல் + மர்மம் கலந்த ஒரு சுவாரசியமான கதை. உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து படியுங்கள். நன்றி .
பிரியமுடன்..... உங்கள் ஜெபா.
அந்த பள்ளியின் முகப்பு கட்டிடமே அதன் பணபலத்தை காட்டியது. மணி நான்கை தொட ஆரம்பித்த உடனேயே அந்த இடம் கார் பைக் என நிரம்பி வழிந்தது.
பள்ளி முடிந்ததன் அறிகுறியாக லாங்க் பெல் அடிக்க மாணவர்கள் வேகமாக வெளியேறினார்கள்.
ராகவேந்திரன் வெளியே செல்ல முயற்சிக்க ஓடி வந்த வாட்ச்மென் தம்பி... இன்னும் கார் வரவில்லை என்று சொல்ல ச்ச.. என்று சலித்த படியே மரத்தடியில் அமர்ந்தான்.
ராகவேந்திரன் சர்மா...இது தான் அவன் பெயர். அவனது அப்பா பெரிய பிஸினஸ் மேன். ராகவேந்திரனும் சாதாரண ஆள் இல்லை.இப்போது தான் பன்னிரெண்டு படிக்கிறான். அதற்குள் ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து விட்டான். ஆனால் அவனது அப்பா பெயரில் இயங்கி கொண்டு இருக்கிறது.
சில பேருக்கு அபார அறிவு இருக்கும்.அதில் ஒருவன் ராகவேந்திரன்.எப்போதும் படிப்பு பிசினஸ் பற்றிய நினைப்பு மட்டும் தான் அவனுக்கு.
நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவனுக்கு யாரும் இல்லை. எப்பொழுதும் பிசினஸ் பற்றி யோசிப்பவன். அதற்கு அடுத்து படிப்பை மட்டுமே நேசிப்பவன். கொஞ்சம் கோபக்காரனும் கூட. அவனுடன் பழகாதவர்கள் அவனைப்பற்றி திமிர் பிடித்தவன் என்று நினைப்பார்கள்.
யாருடனும் அவ்வளவு எளிதாக பழக மாட்டான். அவனை எதிர்த்து யாரும் பேசுவது அவனுக்கு பிடிக்காது. கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை மதிப்பான். ஆனால் அவர்களே