தொடர்கதை - நல்ல முடிவு - 01 - ரவை
" ஐம்பது லட்ச ரூபாய் கூட எவரும் தர தயாராயில்லாத உங்க பிளாட்டை ஒரு கோடி ரூபாய்க்கு மேலே விற்றுத் தருகிறேன்..........."
நம்பமுடியாமல் நிரஞ்சன் மலைத்தார். நீங்களும் நானும்கூட அதே நிலையில்தான் இருப்போம்!
மயிலை கபாலீச்வர கோவில்அருகில் மார்த்தாண்டம் வீதிஇருபதாம் எண்ணில் அந்ததேவி அபார்ட்மெண்ட்ஸ்,நாலு கிரௌண்ட் மனையில்நாலடுக்கில் கட்டப்பட்ட அந்தமாளிகையின் ஒவ்வொருஅடுக்கிலும் ஐந்து பிளாட்கள்!மொத்தம் இருபது பிளாட்டில்இருபது ஆண்டுகளாக வசித்துவரும் இருபது குடும்பங்களும் ஒற்றுமையாகமகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
மூன்றாம் அடுக்கு முதல் பிளாட்டில் வசிக்கும் நிரஞ்சன்தான் ஓனர்கள் சங்கஅமைப்பின் தலைவர்.
" என்னய்யா சொல்றே!இந்த பழைய பிளாட்டுக்குஎந்த முட்டாள்யா ஒரு கோடிதருவான்?" " அதைப்பற்றி உமக்கென்ன? உமக்கு இதில்சம்மதமான்னு சொல்லுங்க!" " டபுள் ஓ.கே....." " இவ்வளவு பணத்துக்குநீங்க செய்யவேண்டியது ஒரேஒரு காரியம்தான்......." " சொல்லு, பிரபா! எதுவாஇருந்தாலும், செய்கிறேன்." "இங்கே இருக்கிற எல்லா பிளாட்களும் ஒரே அளவு டூபெட்ரூம் தானே?" " ஆமாம்." " இந்த மாளிகை நாலுகிரவுண்டு மனையில்தானேஎழும்பியிருக்கிறது?" " ஆமாம்." " எல்லா ஓனர்களும் உங்கமாதிரி மிடில் க்ளேஸ்தானே?" " ஆமாம்."
" அவங்களுக்கும் இதேவிலை கிடைச்சா, விற்கத்தயாராயிருப்பாங்க தானே?"
" நிச்சயமா!"
" நீங்கதானே ஓனர்கள்சங்கத் தலைவர்?"
" ஆமாம்."
" நீங்க எல்லாருமாசேர்ந்து நான் சொல்கிறநபருக்கு விற்க சம்மதமா?"
" அதிலே ஒண்ணும்மறுப்பு வராதுன்னு நம்பறேன்"
" வெரி குட்! நீங்கள்எல்லாரும் இந்த நிமிஷமேகோடீசுவரன்கள் ஆனதாகசந்தோஷப்படுங்க! விஷயம்இதுதான்........
திருச்சியிலே உள்ளஒரு பெரிய வியாபாரி இந்தஊரிலே கடை போடணும்னுஒத்தக்கால்ல நிக்கறாரு....அதுக்கு நல்ல இடமா தேடிக்கொண்டிருக்காரு...உங்கமாளிகை இருக்கிற இடம்,மெயின் ரோடுக்கு நெருங்கிஇருக்கிறதாலே, இந்த இடம்அவருக்கு பிடிச்சிருக்கு...அவரிடம் இதுபற்றி முன்னமேபேசி சம்மதம் வாங்கிட்டேன்விலையும் பேசிட்டேன், ....என்ன விலைன்னு சொல்லுங்க?" " இருபது கோடியா?" " பாவம், நீங்க! மிடில்க்ளேஸ் ஆனதாலே, அதுவும்நான்