(Reading time: 12 - 23 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 07 - ராசு

து கனவா? இல்லை நனவா? தனது அறையில்தான் இருக்கிறோமா? என்ற சந்தேகம் ஒரு நிமிடம் மகாலட்சுமியை தடுமாற வைத்தது.

புது இடம் என்ற எண்ணம் கூட இல்லாமல் நிம்மதியான உறக்கத்தில் இருந்தான் மாதவன்.

அவனால் எப்படி இப்படி உறங்க முடிகிறது? என்ற சந்தேகமும் அவளுக்கு எழுந்தது.

பெரிய கட்டில். அவன் ஒருபக்கம் படுத்திருந்தான். மறுமுனையில் சென்றமர்ந்தாள்.

அவனைத் திரும்பிப் பார்த்தாள். நிதானமாக மூச்சு ஏறி இறங்கியது. இன்று அவர்களுக்கு முதலிரவு என்ற நினைவு இல்லாமலே உறங்குகிறானா? இல்லை தன்னை புறக்கணிப்பதற்காக இவ்வாறு நடந்துகொள்கிறானா?

தன் மேல் கோபமாக இருப்பானோ? என்ற சந்தேகமும் வந்தது.

எவனை மாதிரி தனக்கு கணவன் அமைந்துவிடக்கூடாது என்று நினைத்திருந்தாளோ அவனை மாதிரி அல்ல, அவனே தனக்கு கணவனாக வாய்த்தது தன் விதிதான் போலும் என்று நினைத்தாள். அவளுக்கு தன் நிலைமையைக் கண்டு சிரிப்பதா? அழுவதா என்றே தெரியவில்லை. எப்படியோ இன்று அவன் உறங்கிவிட்டான். ஆனால் காலம் முழுவதும் இப்படியே சென்றுவிடாதே.

இன்று இவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் நாளை அவன் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும். அவனோடு தனியாக இருக்க வேண்டும்.

தன் நிலைமை இனி என்னவாகும்? என்ற யோசனையில் அவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

திருமணத்தன்று இரவு எத்தனை பெண்கள் தன்னை மாதிரி இருப்பார்கள்? இதுவே வேறு மணமக்கள் தங்கள் இடத்தில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இது போல் எல்லாம் அவளுள் யோசனை ஓடிற்று.

தங்கள் வீட்டில் அவன் ஒன்றும் செய்துவிடமுடியாது என்ற தைரியத்தில் படுத்தவள் தன்னையறியாமல் அசந்து உறங்க ஆரம்பித்துவிட்டாள்.

காலையில் அவள் கண் விழித்தபோது அருகில் மாதவனைக் காணவில்லை.

ஒருவேளை தனக்கு திருமணம் ஆனதோ கனவோ? என்ற சந்தேகம் எழுந்தது. அவள் கழுத்தில் புத்தம் புதிதாய் தொங்கிய மஞ்சள் கயிறு கனவில்லை. நிஜம்தான் என்று அவளுக்கு உணர்த்தியது.

குளித்தவள் அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அவளது தந்தையும், சகோதரர்களும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அதில் நடுநாயகமாய் அவன் அமர்ந்திருந்தான். அதுவும் அவன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

அதுவும் அவன் சிரித்துப் பேசுகிறான் என்றதும் விழிகள் விரிய அவள் அவனையேப் பார்த்தாள். எப்போதும் கடுகடுவென்று இருக்கும் அவன் முகத்தில் சிரிப்பா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.