“ஏன்டி இங்கேயே சுத்தி சுத்தி வர்றே. போய் மாப்பிள்ளையைப் பாரு.”
“அம்மா ஏன்மா என்னை விரட்டறதிலேயே இருக்க? நான் இன்னிக்கு மட்டும்தானே இங்கே இருக்கப்போறேன். இனி அவர்கூடத்தானே இருக்கப்போறேன்மா.”
அவளது குரலில் வளர்மதி கண்கள் கலங்கினாள்.
மகள் இனி இன்னொருவருக்குச் சொந்தம்.
அவள் சொன்ன மாதிரி இன்று மட்டும்தானே இங்கே இருக்கப் போகிறாள். நாளை முதல் அவள் கணவன் வீட்டில்தானே இருக்கப் போகிறாள்.
அதுவும் அவள் வாழப்போகும் வீட்டை நினைத்து மனம் கலங்கத்தான் செய்தது.
பேத்தி விடுதியில் தங்குவதை கூட விரும்பாத கந்தசாமி அவள் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டையே அவள் பெயரில் விலைக்கு வாங்கிவிட்டார்.
இப்போது மாதவன் தங்கள் கல்யாணத்திற்கு நிபந்தனை விதித்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களே.
மாதவன் தான் இருக்கும் வீட்டில்தான் தாங்கள் வசிக்கப் போவதாக முன்னரே தெரிவித்துவிட்டானே. அதுவும் வாடகை வீடுதான். இவர்களும் ஒத்துக்கொண்டுவிட்டார்கள்.
மாதவன் குணம் அறிந்தவர்கள் அவனின் தன்மானத்தை காயப்படுத்த விரும்பவில்லை. அவனாக அவர்களைப் புரிந்துகொண்டு அவர்கள் தருவதை ஏற்றுக்கொண்டால்தான் ஆயிற்று.
மகளை அணைத்துக்கொண்டாள் வளர்மதி. அவள் கண்கள் கலங்கிற்று.
“இப்படி எல்லாம் பேசி அம்மாவை வருத்தப்படுத்தாதேடா செல்லம். அம்மா இத்தனை நாள் உன்கிட்ட கடுமையா இருக்கிற மாதிரி நடிச்சேன்டா. ஏன்னா வீட்டில் உள்ளவங்க கொடுக்கிற செல்லத்தால் நீ தடுமாறி போயிடுவியோன்னு எனக்குப் பயம். அதனால் எங்கே உன் எதிர்காலம் பாழாகிடுமோன்னு ரொம்ப பயந்தேன். அதனால்தான் உன்கிட்ட நான் கடுமையா நடந்துக்கிட்டேன். ஆனால் இப்ப நீ இன்னொரு வீட்டிற்குப் போகப்போறே. அம்மா இப்பவும் உன்னைக் கட்டாயப்படுத்திட்டேன்ல. இப்பவும் அம்மா உன் நல்லதுக்காகத்தான் செய்தேன். இது போகப்போக உனக்கே தெரியும். அம்மாவை வெறுத்துடாதேடா. நீ உன் வாழ்க்கையை நல்லா வாழனும். உன் புருசனை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. அவர் உறவுகளோட அரவணைப்பில் வளரலை. நீதான் அவருக்கு எல்லாமா இருந்து அரவணைச்சுப் போகனும். மாப்பிள்ளை எதற்காகவது கோபப்பட்டாலும் நீதான் பொறுமையாக போகனும். நீ நல்லா வாழ்றதுலதான் இந்த வீட்டில் உள்ளவங்களோட சந்தோசம் இருக்கு.”
வளர்மதி பேசப்பேச மகாலட்சுமிக்கும் கண்ணீர் வந்தது.
“அம்மா. தயவுசெய்து அழாதேம்மா. நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன்மா. உங்களுக்கு கெட்ட