"உங்கப்பா வந்திருக்கிறார் பார்!" என்று ஒற்றை வரியில் உதிர்த்துவிட்டு தனது அறைக்குள் அவர் செல்ல முயல,
"தர்மா!" என்ற குரல் அவரை தடுத்தது. அத்தனை உரிமையும், அதிகாரமும் கொண்டு அவரை அழைக்க உரிமைக் கொண்ட அந்த ஒருவர் யாரென்பதனை அவர் நன்குணர்வார். இத்தனை ஆண்டுகள் கழித்து அக்குரலைக் கேட்ட மாத்திரமே அவரது விழிகள் கலங்கிவிட்டன. மகனும், மருமகளும் என்ன செய்வதென்றே விளங்காமல் தவித்திருக்க, எச்சலனமும் இன்றி தன் மனைவியை நோக்கி முன்னேறினார் இராகவன். ஏதும் விளங்காமல் தவித்திருந்தவரின் அருகே சென்றவர்,
"நான் உன்னை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்!" என்று ஓர் இடியை இறக்கினார் அவர். ஏதும் விளங்காமல், திக்கற்றுப் போய் அனைவரது பார்வையும் இராகவனிடத்திலே நிலைப்பெற்று இருந்தது.
"இத்தனை வருடமா என் பக்கமிருந்த தவறால மட்டுந்தான் நான் உன்னைப் பார்க்கக் கூட தயங்கினேன். ஆனா, இனி நான் தயங்கணும்னு அவசியமில்லை. உடையானுக்கு எல்லா உண்மையும் இந்நேரம் தெரிந்திருக்கும்! இனி நான் உன்கிட்ட குற்றவுணர்வோட இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை! என் கூட வா!" என்றார் அவர். தாயாரோ குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றவரானார். இத்தகு புதுவித சோதனையை அவர் நிச்சயம் எதிர்நோக்கவே இல்லை.அச்சத்தின் விளிம்பிற்கே தள்ளப்பட்டார் அவர்!
"வான்னு சொல்றேன்ல!" சற்றே உரத்த குரலில் கூறி, தன் மனைவியின் கரத்தினை இத்தனை ஆண்டுக்கால பிரிவிற்குப் பிறகு பற்றினார் அவர். அதனைக் கண்ட புதல்வனோ,
"அப்பா என்னப் பண்றீங்க?" என்றுப் பதறியவண்ணம் அவரைத் தடுக்க முற்பட்டார். எக்காரணத்தாலோ, மனதில் அந்தக் காதல் உயிரோடு இருந்த சமயத்திலுமே இராகவனிடத்திலிருந்துத் தனதுக் கரத்தினை விடுவிக்கவே முயன்றார் தர்மா. ஆயினும், வலியத் தனதுப் பிடியினை விடுவிக்காதவராய்,
"என்னடா? நீ என்ன குறுக்க?" தன் புதல்வனிடத்திலே அவர் உரக்க பேச, அவன் குரல் அடங்கிப் போனது.
"பா! அம்மா கையை விடுங்கப்பா! சொன்னாக் கேளுங்க!" இயன்றவரை தண்மையாய் பேசினான் ஆதித்யா.
"இவ முதல்ல என்னுடைய மனைவி! அப்பறம் தான் உனக்கு அம்மா! என்னுடைய இந்த முடிவுல குறுக்க வர எவனுக்கு அதிகாரமில்லை." என்று அழுந்த உரைத்துவிட்டு வலுக்கட்டாயமாக தர்மாவை இழுத்துக் கொண்டு கிளம்பினார். சிந்திப்பதற்கும், சிறு அவகாசமும் அவர் ஏற்படுத்தித்