தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 06 - ஜெபமலர்
அவசர அவசரமாக தன் வேலையை செய்து கொண்டு இருந்தாலும் அவன் நினைவு ஏனோ வேலையில் இல்லாமல் எங்கோ சிதறி நிறைந்து இருந்தது.
ராகவ் டீ ரெடி... என்று சொல்லி கொண்டு இருந்த ராமு அவனிடம்இருந்து பதில் வராததைக் கொண்டே அவன் நினைவு இங்கே இல்லை என்பதை உணர்ந்து கொண்டார். மெதுவாக அவனருகே வந்தவன் அவன் தோளை பிடித்து உலுக்க என்ன ராமு ஏதாவது கேட்டீர்களா என்று கேட்க அவரோ டீ கோப்பையை நீட்டினார்.
ஒரு புன்சிரிப்புடன்வாங்கிக் கொண்டவன், ராமு முக்கியமான வேலையா வெளிய போறேன் என்று சொல்ல ராமுவும் சிரித்த முகத்துடன் தலையசைத்தான்.
வருடங்கள் நான்கு கடந்து விட்டது தான். ஆனால் கடந்து வந்த நாட்கள் எளிதாக இருக்கவில்லை குழலிக்கு. தன் தாத்தாவிற்கு அடுத்து அவள் நேசித்தது நம்பியது தேடியது எதிர்பார்த்தது விரும்பியது எல்லாமே ராகவ்வையும் அவன் பாசத்தையும் தான்.
பல தடவை யோசித்து பார்த்து இருக்கிறாள். உலகத்தில் எத்தனை கோடி பேர் சுற்றியிருந்தும் தன் மனம் ஏன் ராகவ்வை மட்டும் தேடுகிறது என்று. ஆனால் அவளின் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
ஒவ்வொரு நாளையும் கணக்கிட்டுக் கொண்டு தான் காலத்தைக் கடத்தினாள். நான்கு வருடம் கடப்பதற்குள் அவளுக்கு நான்கு ஜென்மத்தை கடந்துவந்த ஏக்கம் தெரிந்தது.
குழலி வழக்கம்போல ராகவ்விற்காக பூங்காவின் அருகில் இருந்த ஆலமரத்தடியில் காத்துக் கொண்டிருந்தாள். மணித்துளிகள் நகர்ந்து கொண்டே சென்றாலும் அவள் முகத்தில் கோபமோ வருத்தமோ தெரியவில்லை. மாறாக எதிர்பார்ப்பு மட்டுமே காணப்பட்டது.
இன்று நேற்று அல்ல... கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அந்த மரத்தடியில் காத்திருப்பது பூங்குழலியின் வழக்கம்தான். எப்பொழுதுமே அவளிடம் கோபம் இருந்தது இல்லை. மாறாக ஒரு புன்சிரிப்பும் அதோடு ஒரு பெரிய எதிர்பார்ப்புமே அவள் முகத்தில் படர்ந்து இருக்கும்.
இன்றும் அதே போல மென் சிரிப்புடன் காத்திருந்தவள் மனம் கற்பனையில் ராகவ்வை எண்ணத்தொடங்கியது.
நான்கு வருடங்களுக்கு முன்பாக பார்த்தவன். இப்பொழுது எப்படி இருப்பான் என்று அவள் மனம் நினைக்க என்னவோ தோன்றவே வேகமாக தன் கைப்பையில் இருந்து ஒரு சிறிய நோட்பேடையும் பென்சிலையும் எடுத்து வரைய தொடங்கினாள்.
அவளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதாவது ராகவ்வின் நினைப்பில் லயித்து இருக்கும் போதெல்லாம் அவள் செய்வது இந்த ஒரு காரியம் மட்டுமே. இத்தனை நாளும்