(Reading time: 9 - 17 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தன்னைப் பார்த்து இருப்பதற்கு முந்தைய படங்களை வரைந்து இருந்தவள் இன்று முதன் முதலாக நான்கு வருடம் கழித்து எப்படி இருப்பான் என்று யோசித்ததன் விளைவாக அவள் மனக் கண்ணில் தோன்றிய ராகவை வரைய ஆரம்பித்தாள்.

பள்ளிப் பருவத்தில் பார்த்த அந்த ராகவ் உருவத்தை கொண்டு தன் மனதில் கற்பனையாக அவனைப்பற்றி நினைத்திருந்த விதமாக அவள் கைகள் ஆங்காங்கே கோடுகளை போட ஆரம்பித்தது. அவள் தன் ஓவியத்தை வரையத் தொடங்கிய அந்த கணப்பொழுதில் அவளுக்குப் பின்னால் வந்து நின்ற அந்த ஒருவனை அவள் கவனிக்க தவறி விட்டாள்.

அவள் எண்ணமும் கவனம் முழுவதும் அந்த ஓவியத்திலும் ராகம் நினைவிலேயும் இருந்ததால் அவள் சிந்தனை வேறு எங்கும் சிதறாமல் ஓவியத்தை வரையத் தொடங்கினாள்‌. அதனால் பின்னால் நின்று அவளை கவனித்துக் கொண்டிருந்த அந்த புதியவனை காணத் தவறி விட்டாள். அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அந்த புதியவன்.

கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். அவள் நினைத்த உருவத்தை வரைந்து முடித்திருந்தாள். பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்த அந்த புதியவனின் கண்கள் ஆச்சரியத்தில் மின்ன தொடங்கியது. அந்த ஓவியத்தைப் பார்த்து கொண்டிருந்தவளின் உடலில் கூட ஒரு புதுவித உணர்வு ஏற்பட்டது.

ஒருவேளை இப்படி தான் இருப்பானோ என்று சொல்லி அவள் வரைந்த ஓவியத்தை அந்த பேப்பர் கூட வலிக்காமல் தடவி கொடுத்தாள் பூங்குழலி.

சிறிது நேரத்தில் அவளது கவனம் சிதற அப்பொழுதுதான் தன் பின்னே யாரோ நிற்பது உணர்ந்து அவசர அவசரமாக பின் திரும்பி பார்த்தவள் அதிர்ந்து விட்டாள். அவளை அறியாமலே அவள் கையில் இருந்த அந்த நோட்புக்கும் பென்சிலும் கீழே விழுந்தது.

அவள் அதிர்ச்சியில் உறைந்து நிற்பதைப் பார்த்த அந்த புதியவன் குனிந்து கீழே கிடந்த பென்சிலையும் நோட்புக்கையும் எடுத்து அவள் கைகளில் கொடுத்துவிட்டு குயிலி என்றான்.

அவன் அவளை அழைத்த விதமோ அல்லது நீண்ட நாள் கழித்து அவனை பார்த்ததாலோ அல்லது அவனது வார்த்தைகளில் இருந்த ஏதோ ஒன்று அவளை எதோ செய்ய அனைத்தையும் மறந்தவள் ஓடிச்சென்று அவன் பரந்த மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

ஆறு அடிக்கும் அதிகமான உயரம், மாநிறம், குறும்பு பேசும் அவன் விழிகள், கம்பீரமான மீசை, அடர்த்தியான கருகருவென்று வளர்ந்திருந்த தலைமுடி... காற்று வீசும் திசைக்கு ஏற்ப அதுவும் அசைந்து கொடுக்க அவன் முகத்திலிருந்து இருந்த சந்தோஷத்தில் அவன் அழகு இன்னும் பல மடங்காக தெரிந்தது.

தன் பரந்த மார்பில் முகம் புதைத்து இருந்த அவளின் விழிகள் சொரிந்த நீர் அவன் மார்பை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.