என்று அவள் சொன்ன விதத்திலேயே மகிழ்ந்து போனான் ராகவ்.
பிரிய நினைக்கும் அந்த கடைசி நொடியில் மௌனமே மொழியாகி நிற்பது அன்பு கொண்ட நெஞ்சங்கள் இடையே இயல்பு தானே... அதுபோல அன்பு கொண்ட அந்த இரு நெஞ்சங்களும் கிளம்ப தயாரானாளும் அவர்கள் மனம் அமைதி கொண்ட அந்த இடத்திலேயே நிற்க இருவரும் விழிகளில் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.
குழலியின் மனது இது எப்படி இவ்வளவு ஆழமான உறவானது.... பார்த்து கொள்ளவில்லை... பேசிக் கொள்ளவில்லை... ஆனால் மனமெங்கும் நினைவுகளாய் நிறைந்து இருக்கிறதே...
எல்லாம் பார்க்கும் போது ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது குழலி மனது. இவனிடம் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன் என்று யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு அந்த வினாவிற்கு விடை கிடைத்ததாக தெரியவில்லை.
அவன் மனமும் யோசிக்க ஆரம்பித்தது... எத்தனை பெண்களிடம் பழகினாலும் ஏன் என் மனம் எப்பொழுதும் குயிலி மட்டுமே நிறைந்து இருக்கிறாள் என்று நினைக்க விடை அவனுக்கும் கிடைக்கவில்லை.
ஆனாலும் விழிகள் ஒவ்வொன்றும் அங்கு பேசிக்கொண்டிருந்தது. அவர்கள் பேசிய மொழி அவர்களுக்குத்தான் புரிந்திருக்கும் போல.
நான்கு விழிகள் பரிமாறிய செய்திகளில் காதல் இருந்ததா... நட்பு இருந்ததா... அல்லது அதையும் தாண்டிய வேறு ஏதாவது ஒரு உணர்வு இருந்ததா உறவு இருந்ததா என்று அவர்கள் இருவரின் மனதிற்கும் தான் புரிந்திருக்கும்.
எவ்வளவு நேரம் அப்படியே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்களோ.... தெரியவில்லை.
திடீரென்று அந்த இடமே வெப்பமாவதை போல உணர்ந்தாள் குழலி. வேகமாக தன் விழி பேசிய வார்த்தைகளை நிறுத்திவிட்டு ராகவ் கையைப் பிடித்து இழுத்தாள். அவனின் அருகாமை உறை பனியாய் குளிர வைக்கவும் அவன் அதித அன்பில் அவள் உடல் சற்று நடுங்க ஆரம்பித்தது. அவளால் அந்த சூழ்நிலையை நிதானிக்க முடியவில்லை.
ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள் யோசனையில் தடுமாறி நிற்க ராகவ் கேட்ட கேள்விகள் எதுவும் மனதில் பதியவில்லை.
நாம் இங்கிருந்து வேகமாக செல்லவேண்டும் என்று சொல்ல அவனும் சரியென்று சொல்ல இருவரும் காரை நோக்கி நடந்தனர்.
எதிர்பாராதவிதமாக கையில் இருந்த கர்ச்சீப் கீழே விழ அதை எடுக்க குனிகையில் அவள் தலையை நோக்கி வந்த சிறிய உருட்டு கட்டை ராகவின் தோள்பட்டையை பதம் பார்த்தது.
ஆவென்ற அவன் சத்தத்தில் திடுக்கிட்டவள் ஒரு நொடியில் சுதாரித்து கொண்டு ராகவ்வை கார்