“ சரிப்பா!”
தூங்கி எழுந்ததும்,நிரஞ்சன் முதல் வேலையாகசேகரை அழைத்தான்.
“ என்ன, தயார் பண்ணியாச்சா?”
“ ஒரு பேப்பரிலே எழுதி வச்சிருக்கேன், இந்தா! இதை படிச்சிட்டு தயாராயிடு!
“ நிரஞ்சன் அதை படித்துப்பார்த்தான். பிரமாதமாக அதுஇருந்தது. மகனை தட்டிக்கொடுத்துவிட்டு, நிரஞ்சன்அதை மனதில் அசைபோட்டுபார்த்தான். வெற்றி உறுதி என நம்பிக்கை பிறந்தது! குறிப்பிட்ட நேரத்துக்குமுன்பே கூடிவிட்டனர், எல்லாஓனர்களும். நிரஞ்சன் எதுவும் பேசும் முன்பே, மற்றவர்கள்அவனை பாராட்டினர்.
“ தலைவா! உண்மைபேசணும்னா, நான் பொறுமைஇழந்து எப்படா பிளாட்டைவிற்கப்போகிறோம்னு தவித்தநேரத்திலே, நீங்க கல்கண்டுமழையா கொட்டிட்டீங்க,இந்த குடித்தனம் இருப்பவன்படுத்தற பாடு, சகிக்க முடியவில்லை....”
“ நிரஞ்சன்! ரியல் எஸ்டேட்மார்க்கெட், இந்த தொற்றுவந்ததுக்குப் பிறகு, தரைமட்டத்துக்கு விழுந்துள்ளநிலையிலே எப்படி நீங்க இந்த அதிசயத்தை செய்துசாதனை பண்ணினீங்க?”
“ அதைவிட, நாம ஒருவரும்அவரிடம் இதுபற்றி எதுவும்கேட்காதபோதே எப்படி தன்சுயமுயற்சியிலே நம்மைகோடீஸ்வரனாக்கிட்டாரு!”
“ தலைவா! உண்மையைச்சொல்லணும்னா, நான் இதுவரையிலே மொத்தமா ஒருமுறைகூட ஒரு கோடி ரூபாபார்த்ததேயில்லே.....”
“ அதைவிட மோசம், என்நிலமை! கோடிக்கு எத்தனைசைபர்னு கூட தெரியாது....
“ நிரஞ்சன் இதுதான்தக்க சமயம் என்று மீட்டிங்துவக்கினார்.
“ உங்க எல்லாருக்கும்என் பணிவான வணக்கம்.நம்ம சங்க சரித்திரத்திலேயேஇதுதான் எல்லா இருபது ஓனர்களும் கூடியிருப்பதுமுதல் தடவை! வழக்கமாமூணுபேர் கூட வரமாட்டீங்கஅதனாலேதான் பெரியவங்கசொன்னாங்க, 'சோழியும்குடுமியும் சும்மா ஆடாது'னு!
முதல்லே, எல்லாரும்சந்தோஷப்படற விஷயத்தைஉறுதிப்படுத்தறேன். ஆமாம்,கடுமையா பார்கெயின் பண்ணி,விலையை ஒருகோடிரூபாய்க்கு உயர்த்திட்டேன். வாங்கப் போகிறவர் ஒரு வியாபாரி! பேரம் பேசிபழக்கப் பட்டவரு, நான் ஒருஉத்தியோகஸ்தன்! நினைத்துபார்த்தால், நம்பவே முடியலை, எப்படி வியாபாரிசம்மதிச்சாருன்னு! ஆனா, அவரும் ஒண்ணும் ஏமாளியில்லே! நம்ம இடத்திலே பெரிசாகடையை கட்டி வியாபாரம்செய்தால், ஒரே மாசத்திலேஇந்தப் பணத்தை சம்பாதிக்கமுடியுமே! சரி, இப்ப முடிவு செய்யவேண்டியதை ஒவ்வொன்றாபார்ப்போம். முதல்லே, தெரிஞ்சிக்கவேண்டிய விஷயம், நம்மபில்டிங்கை விற்க எல்லாரும்ஒப்புக்கிறீங்களா, அல்லதுயாருக்காவது ஆட்சேபணைஇருக்கா?