தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 02 - ஜெபமலர்
வேலை பிடித்து போய் விட்டது. அதோடு வேலை செய்யும் இடமும் ஜனனிக்கு மனநிறைவு தர அவளுடைய அழகும் சற்று கூடி இருந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை... விடுமுறை நாள் என்பதால் சந்தியாவுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டு இருந்தாள் ஜனனி.
ஹேய்... ஜனனி, முகத்தில் எக்ஸ்ட்ரா பிரைட் தெரியுதே... தன்னோட பாட்னரை கண்டு பிடித்தால் தான் முகத்தில் க்ளோ தெரியும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.... அப்போ நீயும் உன்.... என்று இழுத்து கொண்டு இருக்கும் போதே சந்தியா என்று கத்தி இருந்தாள்.
ஆனால் அதற்கு அடுத்த வார்த்தை பேசும் முன்னால் ஜனனியின் கண் முன் அந்த பெயர் தெரியாத பணக்கார போதைக்காரன் முகம் தோன்றி மறைந்தது.
ச்ச... இவன் முகம் ஏன் தெரியுது.. ஸ்டுபிட் என்று வாய் விட்டு திட்டி இருந்தாள் ஜனனி.
இதை எல்லாம் கேட்டதோடு ஜனனியின் முகத்தில் வந்த போன மாற்றத்தை கண்ட சந்தியா புரிந்து கொண்டு மேலும் தோழியை குழப்பாமல் ஊரில் உள்ள விஷயங்களை பற்றி பேச ஜனனி தெளிவாகி இருந்தாள்.
ஒருமணிநேரம் குறையாமல் பேசிக் கொண்ட தோழிகளின் மனதும் நிறைவாகி இருந்தது. மீதி இருந்த வேலையை முடித்து விட்டு அதே மனநிறைவோடு படுத்தாள் ஜனனி.
திடீரென்று கண்களை திறக்க அவளின் அருகில் படுத்து இருந்தான் அவன். அவளையே இமைக்க மறந்து ரசித்து கொண்டு இருந்தான்.
அன்றைக்கு பார்த்ததை விட இன்று அவன் முகத்தில் தேஜஸ் கூடி இருந்தது. முகத்தில் அன்று இருந்த சிடுசிடுப்பும் கார பார்வையும் மறைந்து ஒருவித சிரிப்போடு அவளை ரசித்துப் பார்த்தான்.
அவனது பார்வையில் சிறிது நேரம் தன்னையே மறந்து அவனையே பார்த்தவள் திடுக்கிட்டாள். யார் இவன்.. எப்படி என் அறைக்கு வந்தான். ஒருவேளை கனவோ என்று எண்ணியவள் தன்னையே கிள்ளிப் பார்த்தாள்.
ஹேய் பேபி... வலிக்கும் டா என்றவன் உரிமையாக அவளின் கையை பிடித்து தடவி கொடுக்க அவளின் மெய் சிலிர்த்தது.
அவள் கிள்ளி பார்த்த இடத்தில் ஏற்பட்ட வலி இது கனவு அல்ல நிஜம் என்று உணர்த்த நீ... நீ எப்படி இங்கே வந்த என்று தலையணையை எடுத்து அடிக்க ஓங்க அதை எதிர்பார்த்து இருந்தவன் போல தலையணையை வாங்கி நெஞ்சோடு அணைத்து கொண்டு பேபி.... புருஷனை ஒருமையில் பேசக்கூடாதுடா என்று சொல்ல கோபத்தில் உன்னை என்ன செய்கிறேன் பார் என்றவள் வேகமாக எழுந்து அவனை தாண்டி கீழே இறங்க முயற்சி செய்ய