அவனோ அவளை பிடித்து இழுக்க அவன் மேலேயே சரிந்து இருந்தாள் பெண்ணவள்.
மேலே விழுந்தவளை இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன் ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க அவளோ ச்சீ... போடா என்று சொல்லி விட்டு நகர முயற்சி செய்ய அவன் பிடியோ இறுகியது.
அதை எதிர்பார்க்காதவள் எப்படி தப்பிக்க என்று யோசித்தாள். அவள் சிந்தனையில் ஆழ்ந்ததும் அவள் நெற்றியில் ஏற்பட்ட சுருக்கங்களை தன் ஒற்றை விரலால் மென்மையாக வருட இது தான் தருணம் என எண்ணியவள் அவன் கையில் கடித்தாள்.
இதை எதிர்பாராதவன் ஆவென்று கையை நகர்த்த அவனின் கையணைப்பில் இருந்து விடுபட்டவள் அவசரமாக எழும்ப தடுமாறி கீழே விழுந்தாள்.
கால் முட்டியில் அடி சற்று பலமாக பட அம்மா என்று கத்தியவள் மெத்தையை பார்க்க மெத்தையில் அவன் இல்லை.
வேகமாக எழுந்தவள் அவன் எங்கு போனான் என்று தேட கதவு உள்பக்கமாக லாக் செய்யப்பட்டு இருந்தது. ஜன்னலும் பூட்டி இருக்க மெத்தையை பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.
அ....அ...அப்போ எல்லாம் கனவா என்று தோன்ற அவள் கை தானாக நீண்டு தலையணையை எடுத்தது. அவள் பல் தடங்கள் பதிந்து இருக்க அவளுக்கு வேர்த்து கொட்டியது.
அருகில் இருந்த டம்ளரில் தண்ணீர் ஊற்றி குடித்தவள் , இவன் ஏன் என் கனவில் வந்தான். போயும் போயும் இவன் தான் வரனுமா என்று சொல்லி கொண்டே படுத்தாள். அவள் மனமோ வேறு யாரையாவது எதிர்பார்த்தாயா என்று கேட்க அவளோ ஐயோ... இது என்னடா கொடுமை என்றவள் அப்படியே உறங்கி போனாள்.
வழக்கமாக எழும் நேரத்தை விட சற்று தாமதமாக எழுந்தவள் அரக்கப்பரக்க வேலையை முடித்து விட்டு வேகமாக தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் ஜனனி....
வேகமாக சென்றவள் தன் ஆபிஸ் இருக்கும் சந்தில் திரும்ப அதே நேரத்தில் எதிராக வந்த காரை பார்த்ததும் சற்று திணற டூவிலர் ஒரு சிறிய கல்லில் ஏற அதை கட்டுப்படுத்த முடியாமல் எதிரில் வந்த காரில் இடித்து ஸ்கூட்டியை கீழே போட்டாள்.
ஆபிஸ் இருக்கும் அந்த திருப்பத்தில் வேறு கடைகளோ வீடோ இல்லை. அந்த திருப்பத்தில் திரும்புபவர்கள் நிச்சயம் அவள் ஆபிஸிற்கு தான் செல்ல வேண்டும்.
அதனால் தான் அவள் காரை எதிர்பார்க்காமல் எப்போதும் போல திரும்பி விட்டாள்.
என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தோடு நிற்க காரில் இருந்து இறங்கினான் ஒருவன்.
அவன் அணிந்திருந்த சர்ட்டை பார்த்ததும் நேற்று கனவில் பார்த்ததும் இதே மாதிரி சர்ட்