"நீ உன் மாமா தங்கதுரையை சொல்றியா.. அவர்தான் மீராவின் அப்பாவா?.
"அது…. அவர் இல்லை."
"உனக்கும் மீராவுக்கும் என்ன உறவுடா.. கல்யாணம் செய்துக்கற முறைன்னு சொன்னியாம் . அதனாலதான் அவங்க பின்னாடியே சுத்திட்டு இருந்தியாம். "
" அது… நான் தங்கதுரை மாமாவோட அக்கா மகன். மாமாவோட மனைவி எங்க அத்தை வளர்மதிக்கு ஒரு தங்கை இருந்தாங்க. வசுமதி... அவங்க ஒரு கிறித்துவரை கல்யாணம் பண்ணிட்டாங்க. அவரு பேரு குணாளன். ரெண்டு பேருமே டாக்டர்கள். அதோட அவரு பெரிய பணக்காரரு… அதனால நாங்க எல்லாரும் அவங்ககூடதான் இருந்தோம். அவரோட பொண்ணுதான் மீரா. அவளுக்கு ஐந்து வயசாகும்போது அவங்க இறந்துட்டாங்க. அப்புறம் வளர்மதி அத்தைதான் அவளுக்கு கார்டியன் ஆனாங்க…"
" இது மீராவிற்கு தெரியுமா…?"
"முதல்ல தெரியாது. பதினஞ்சு வயசிருக்குமபோது அத்தை சொல்லிட்டாஙக."
"ஏன்?"
"மீராவை தத்து எடுத்தப்போ அத்தைக்கு குழந்தை இல்லை. அதுக்கப்புறம் அஞ்சனா பிறந்தாள். மீராவுக்கு சரியான கவனிப்பு இல்லாததால ரொம்பவும் பிடிவாதம் கூடிப் போச்சு… அதனால் சொல்லிட்டாங்க"
"துருதுருன்னு இருந்த சின்ன பெணெணை மனசுல அடிச்சு கட்டுப்பிட்டிற்கு கொண்டு வந்திருக்கீங்க. அப்படிதானே…"
"அது… அவள் சொல்பேச்சு கேட்கறதில்லேனு அத்தையும் மாமாவும் சொல்லுவாங்க…"
"அதுக்கு நீ என்ற செஞ்சே…"
"நான் எதுவும் செய்யலை. மாமாதான் மீராவிடம் அவளுடைய அப்பாம்மா இறந்து போனதை சொல்லிட்டாரு…"
"அப்புறம் நீ அவளை கணட்ரோல் பண்ண ஆரம்பிச்சிட்ட…"
"அத்தை மீராவை எனக்கு கல்யாணம் செய்து தர்றதாக சொன்னாங்க. என்னோட வருங்கால மனைவிங்கற எண்ணத்துல அவளை கண்டிச்சேன். அவளும் என்னை எதிர்த்து பேசினதில்ல"
"அப்புறம் மீரா எப்படி சத்யனை கல்யாணம் செஞ்சாங்களாம்… உன்னை பிடிக்காமல்தானே…"
"----"
"அதுக்கப்புறமும் நீ அவங்க வாழ்க்கையில தலையிட்டிருக்கே… ஏன்?"
"நான் ஒண்ணும் செய்யலை"
"ஏய்… ஒரு போலியான மெடிக்கல் ரிப்போர்ட்டை தயார் செய்து மீராவை குழப்பி இருக்கீங்க…