அடித்தான். அப்போது ஒரு கான்ஸடபிள் அங்கு வந்தார்.
"அந்தாளை தூக்கிட்டு வந்திட்டீங்களா?"
"இல்லை சார்… வீட்ல இல்லை சார்.."
"இலன் மாட்டிகிட்டானு தெரிஞ்சிருக்கும். ஓடிப் போயிருப்பான்…. வீட்டு வாசல்ல காவல் போடுங்க. அந்தம்மா செல்லுக்கு எந்த அழைப்பு வந்ததனு செக் பண்ணுங்க. அந்தாள் வந்தாகணும்." உத்தரவிட்ட கேசவ் சத்யனிடம் திரும்பி…
"நாம போகலாம். உன்னோட மாமனாரை பிடிச்சா விஷயம் வந்திடும்" என்று சொல்லியபடி அங்கிருந்து வெளியேறினான்.
"சத்யன்… நாம இப்போ பஸ் விபத்தை விசாரிச்ச போலீஸ் ஸ்டேஷனுக்கு போவோம். அங்கே அவர்கள் ளிடம் இயுக்கும் ஆதாரங்களை செக் பண்ணிடலாம். ஏன்னா… நரத் சொல்றதை பார்த்தால் மீரா உயிருடன் இருக்கும் வாயப்பு மிகக் குறைவு…"
"நோ… நோ… அப்படி சொல்லாத" என்று சத்யன் பதறினான்.
"எனக்கும் அப்படி தான் தோணுது" என்ற ரஞ்சன்,
" ஆனால் இன்னும் ஒரு சிறிய சந்தேகம் இருக்கிறது. பரத் எதையோ சொல்ல வந்து முழுங்கறான். அதை மீராவோட அப்பா கிட்ட கேட்டால் புரிஞ்சிடும். அவர் கிடைச்ச உடனே நம்ம ஒரு முடிவுக்கு வரலாம். இப்போ நீங்க சொன்ன மாதிரி போலீஸ் ஸ்டேஷன்ல போய் இன்னொரு தரம் நம்ம செக் பண்ணி விடலாம்" என்றான்.
"ப்ளீஸ் ஸ்டாப் இட் ரஞ்சன்.எப்படி இப்படி சொல்லலாம்?. மீரா உயிரோடு இருக்கானு நான் நம்பறேன்... உறுதியா என்னோட மனசு சொல்லுது. நீயே அதை நம்பவில்லை என்றால் என்ன அர்த்தம்?"
" இல்லை... சத்யன் ஒரு உண்மையை நீ புரிஞ்சுக்கணும். நாம இத்தனை நாளா புத்தி சுவாதீனமில்லாத சுயநினைவை இழந்த ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருந்தோம். நமக்கு கிடைச்ச விவரப்படி மீரா புத்தி சுவாதீனமில்லாததால் தன்னிலை மறந்து வீட்டை விட்டு வெளியே போய் அந்த பஸ்ல ஏறி விபத்துக்குள்ளானதாக சொன்னாங்க. நாம் அப்படித்தான் தேடிட்டு இருந்தோம். ஆனா இப்போ பரத் சொல்வதைக் கேட்டால் அவள் புத்தி சுவாதீனத்துடன் தான் இருந்திருக்கிறாள். அப்படி அவள் பஸ்ல இருந்து உயிர் தப்பி இருந்தால் இந்நேரம் நம்ம கிட்ட பேசி இருக்கணும். அல்லது எப்படியாவது தொடர்பு கொண்டு இருக்கணும். அந்த மாதிரி எதுவுமே நடக்கல. அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு" என்றான்.
"இருங்க… ஒரு முடிவிற்கு வர வேண்டாம். நாம ஸ்டேஷனுக்கு போய் விசாரிக்கலாம். அந்த முதல் தகவல் அறிக்கையை பார்க்கணும்.. அப்புறம்தான் அடுத்ததை யுகிக்க முடியும். அதுவரை சத்யனை குழப்ப வேண்டாம்" என்று கேசவ் சொன்னான்.