(Reading time: 10 - 20 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

வீட்டிற்கு சென்றாள். அந்த வீட்டில் உள்ள அனைத்து இடங்களையும் சோதித்துப் பார்த்தாள்.

 இங்கே ஏதாவது எனக்காக தாத்தா வைத்திருக்கிறாரா என்று ஒரு இடம் விடாமல் எல்லா இடத்தையும் தேடி பார்த்தாள். அந்த இடம் முழுவதுமே காலியாகவே இருந்தது. அவளுக்கு சிரமத்தை ஏற்படும் வகையிலோ உதவி செய்யும் வகையிலோ அங்கு எதுவுமே இருக்கவில்லை. அந்த வீடு காலியாக இருந்தது. அந்த வீட்டில் நிலைகளின் ஓரத்தில் சாவி துளைகளின் அருகே சாவி போன்ற ஒரு சிறிய இரும்பு கம்பி தனியாக சேர்க்கப்பட்டிருப்பது அவளுக்கு தெரிந்தது. அது வித்தியாசமாக இருக்க அதை அவள் தடவி பார்க்க அந்த துண்டு கம்பி போல இருந்த சாவி அவள் கைகளிலே வந்து விட்டது. இவ்வளவு சிறிய பூட்டு ஒன்று இருக்க முடியுமா என்று விந்தையாக இருந்தது அவளுக்கு.

 ஆனாலும் அந்த சிறிய சாவியை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள். இப்படி ஒரு பூட்டு செய்திருந்தால் அதை கண்களால் கூட பார்க்க முடியாது போலவே என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.

 அதை பார்த்து பார்த்து அவள் சோர்ந்து போய் விட்டாள். இனி பார்க்க வேண்டியது தாத்தா புதைக்கப்பட்டு இருக்கிற கல்லறை மட்டுமே என்று தெரிந்தவள் நேராக தாத்தாவின் கல்லறை அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். தாத்தா எனக்கு எதுவுமே புரியவில்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை நீங்கள் இருந்தாலாவது வழிகாட்டி இருப்பீர்கள் நான் இருப்பது என்ன செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டே அந்த கல்லின் மீது தன் தலையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து இருந்தாள்.

அவள் அமர்ந்து இருந்தது கல்லறையின் அருகில்.  அவள் தலை சாய்த்து கொண்டது கல்லறையின் மேல். கண்மூடி யோசித்தவளுக்கு எந்த ஒரு வழியும் கிடைக்காமல் போக கண்களை திறந்தவள் அதிர்ந்து போனாள்.

 தாத்தாவின் கல்லறையின் மீது அவரது பெயர்தானே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் கல்லறையில் எந்த ஒரு பெயரும் எழுதப்படவில்லை. அதில் எழுதப்பட்டிருந்தது பூங்குழலி என்ற பெயர் மட்டுமே. ஒரு ஓரத்தில் சிறியதாக மட்டுமே தெரிந்தது.

 தூரத்தில் இருந்தோ சற்று விலகி நின்றோ பார்க்கும் போது யாருக்குமே அந்தக் கல்லறையின் மீது இருக்கும் அந்த பெயர் தெரியாது. ஆனால் கல்லறையின் மீது தலை வைத்து படுத்திருந்ததால் மட்டும் அந்த வார்த்தை தெளிவாக தெரிந்தது. 

இந்த கல்லறையில் பக்கத்தில் மிக அருகிலிருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் விதமாக அதில் பூங்குழலி என்று எழுதி இருக்க இதில் ஏன் என் பெயரை எழுதி இருக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். தாத்தா உயிரோடு இருக்கும்போதே அவர் சொல்லிக்கொண்டே

18 comments

  • Ouch 😱😱😱 ena karpanai ena karpanai 👌 thatha graveyard la clue va vachi irukaru yammadiyo :eek: idhai ellam.pana ivarukku neram irundhadha...abathunu therinjum ivalo risky plan ah facepalm good they escaped 👍 raghav suzhnilai kaidhiyaga irukaro?? Is he pretending for some reason??? Hope Kuyili ellathayum kadandhu varuvanganu??? Semma Interesting aga konduporinga jeba ma'am 👏👏👏👏👏👏 how is Ramu connected to their family?? <br />look forward to read the next move.<br />Thank you.
  • இவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்ததே மிக பெரிய கிஃப்ட் .. மிக நன்றி.. தங்களின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி uncle
  • Sema viruviru epi mam :clap: oru thriller movie paakra pola feel :hatsoff: eagerly waiting for the next update mam.
  • அன்புள்ள ஜெபா! கதையின் போக்கு, கற்பனையின் உச்சம். சிக்கல் நிறைந்த மர்மம் மிகுந்த சரித்திரக் கதையா, துப்பறியும் நாவலா என நினைக்கத் தோன்றுகிறது. பிரமாதம்! கல்கியின் நினைவு வருகிறது! சில்சீக்கு வெளியேயும் தங்கள் படைப்புகள்<br />வரவேற்கப்படும் என்பது உறுதி!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.