தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 08 - ஜெபமலர்
ஜனனி நீ ஏன் இவ்வளவு பதட்டமாக ஹலோ சொல்ற... ஏதாவது பிரச்சினையா என்றாள் ஸ்வீனா.
நீ இந்த நேரத்தில் அழைத்து இருக்கிறாயே... அதான் ஏதும் பிரச்சனையோ என்று பதட்டம் ஆகிவிட்டது. ஆனால் நீ என்னடா என்றால் என்னை கேள்வி கேட்கிறாய்... இந்த நேரத்தில் அழைத்து இருக்கிறாயே, உனக்கும் அஸ்விட்கும் ஏதாவது பிரச்சினையா?
நீ வேற ஜானு... கிழக்கில் உதிக்கிற சூரியன் மேற்கில் கூட உதிக்கலாம். ஆனால் இந்த அஸ்விட்கும் எனக்கும் பிரச்சனை என்பது கனவில் கூட நடக்காத விஷயம்...
அப்ப என்ன விஷயம்... தூக்கத்தை விட்டுவிட்டு எனக்கு அழைத்திருக்கிறாய்.
விஷயமா.... எல்லாம் இந்த தனா அண்ணாவால் தான்...
உன் அண்ணனாலயா... என்ன பிரச்சனை.
மீண்டும் பிசினசை பார்க்க சென்று விட்டார்கள். இந்த தன்ஷிகாவை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மறுபடியும் என்னிடம் வந்து விட்டது. இப்போதெல்லாம் எனக்கு கோபமாக வருகிறது. டென்ஷன் ஆக இருக்கிறது கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் அண்ணன் நடந்து கொள்கிறார்.
பாவம் உங்க அண்ணன்.. எதோ பிசினஸ் விஷயம் என்று தானே வெளியே சென்றிருக்கிறார். உனக்குத்தான் லக்கி... தனு கூட என்ஜாய் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஜாலியா ஹேப்பியா இருக்கும். ஏன் டென்ஷன் ஆகுற...
சரியான ஸ்டுபிட் ஜானு நீ... எனக்கு அஸ்விட் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல. ஷாப்பிங் போக முடியல. என் போன்ல கூட ப்ரீயா பேச முடியல. ஆபீஸ்ல வேலை அதிகமா இருக்கு. வீட்டுக்கு வந்த தன்சிகா கூட மல்லு கட்ட வேண்டியது இருக்கு. இப்போதெல்லாம் தன்சிகா குட்டி என்று கூப்பிடுவதற்கு பதிலாக குரங்கு குட்டி என்று கூப்பிடலாமா என்று தோன்றுகிறது என்று அலுத்துக் கொண்டாள்.
தனுவைப் பற்றி சலிப்பாக பேசியதைக் கேட்ட ஜனனி பதில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள்.
ஸ்வீனாவேத் தொடர்ந்து பேசினாள். அந்த குரங்கு குட்டி இப்பதான் தூங்குகிறாள் நான் தூங்குகிறேன் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் போனை துண்டித்து விட்டாள்.
ஆனால் ஜனனியால் தான் அமைதியாக இருக்க முடியவில்லை. ஸ்வீனா மீது கோபம் கொள்ளவும் முடியவில்லை. அதற்காக தன்சிகாவை பார்த்துக் கொள்வதே பெரிய வேலையாக எண்ணி சுயநலமாக பேசுவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்வீனாவின் அண்ணன் பிசியாக இருக்கிறார், சரிதான்... ஆனால் அவளது அண்ணிக்கு பெண்ணைப் பார்த்துக்