போதெல்லாம் நம் மனதுக்குப் பிடித்த அவர்கள்தானே வந்து நிற்கிறார்கள். அவர்களின் இழப்பு அல்லது வெறுப்பையோ தாங்க முடியாமல் அந்த வெறுப்பின் தாக்கத்தையும் வெறுப்பையும் நாம் இந்த விண்மீன்கள் இடம் காட்டுகிறோம். அதுதான் உண்மை என்றாள் சந்தியா.
ஆனால் ஜனனி பதிலேதும் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.
மாறிப்போனது விண்மீன் கூட்டம் அல்ல...
மானிட உலகமும் அல்ல...
தவறையும் சரியையும் நிதானித்து அறிந்து
தைரியமாக எதிர்கொள்ளும் ஜனனி தான்...
எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகள்
ஏற்படுத்தும் வலிகளின் வீரியங்களே இவை...
தட்டிக் கேட்டு எதிர்த்து நிற்கும் துணிவும்
தட்டிக்கொடுத்து பாராட்டும் பண்பும்
தட்டி விழச்செய்யும் கற்களையும்
வெட்டித் தள்ளிவிட்டு முன்னேறும் குணமும்
மறைந்து கொண்டது இங்கே
மனதின் காயங்களுக்குள்...
என்று சந்தியாவின் மனம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை பேசினாலும் அவைகள் மூடிய உதடுகளின் சிறைகளுக்குள் மாட்டிக்கொண்டதால் வெளிவரவில்லை. சிறிது நேரம் அமைதி மட்டுமே நிலவியது. உன்னை மாற்றி வாழ வைப்பதே என் முதல் கடமை ஜனனி என்று சத்தமில்லாமல் தனக்கு மட்டும் கேட்கும் விதமாக முணுமுணுத்துக் கொண்டாள் சந்தியா.
அமைதியைக் கலைக்கும் விதமாக ஜனனி... ஸ்வீனா எதற்காக அழைத்தால் என்று சொல்லவே இல்லையே என்றாள் சந்தியா.
பெருமூச்சு விட்டவள் சிறிய மௌனத்திற்கு பிறகு ஸ்வீனா கூறிய வார்த்தைகளை அப்படியே கூறினாள் ஜனனி.
நீ அந்த ஸ்வீனாவின் அண்ணன் அண்ணியை பார்த்து இருக்கிறாயா.
இல்லை சந்தியா... எனக்கு அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது.
சரி... அந்த பொண்ணு தன்சிகா ஒரு வாரம் உன்னுடன் இருந்தால் அல்லவா அப்போது அவர்கள் உன்னிடம் எதுவும் பேசவில்லையா என்றாள் சந்தியா.
நான் அவர்களிடம் பேசியதும் கிடையாது. பார்த்ததும் கிடையாது. ஏன் போட்டோவை கூட பார்த்தது இல்லை என்றாள் ஜனனி.