கொள்வதை விட வேலை முக்கியமாய் போய்விட்டதா என்று மனதுக்குள் திட்டி தீர்த்து கொண்டிருந்தாள் ஜனனி.
திடீரென்று தோளை பிடித்து உலுக்குவதை உணர்ந்தவள் திடுக்கிட்டு பார்க்க அப்போதுதான் சந்தியாவுடன் பேசிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.
சாரி என்றால் ஜனனி...
உன்னோட சாரி வேண்டாம்... பூரியும் வேண்டாம்... சாரி இருந்தா கொடு கட்டிக்கிறேன் என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொல்ல ஏன் இவ்வளவு கடுப்பாய் பேசுகிறாள் என்று யோசித்துக்கொண்டே சந்தியாவை பார்த்துக்கொண்டே நின்றாள் ஜனனி.
ஏய் லூசு ஜனனி.... ஏன் அப்படி பார்க்கிற
நீ ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிற...
பின்ன கோபம் வராமல் என்ன வரும். ஊருக்கு போனதிலிருந்து என்னை மறந்து விட்டாய். சரி வேலை பிஸி என்று விட்டுவிட்டு நேரம் கிடைக்கும்போது பேசட்டும் என்று நானும் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்போது என்னவென்றால் ஊருக்கு வந்த பிறகும் என்னிடம் பேசாமல் அந்தப் புது ஃபிரண்ட் பற்றி யோசிக்கிற.. புதுசு வந்த உடனே பழசு மறந்து விட்டது என்று கோபமாக கேட்க ஜனனியும் விழுந்து விழுந்து சிரித்தாள்.
ஏண்டி ஹெக்கே புக்கேனு சிரிக்க... நான் என்ன ஜோக்கா சொன்னேன். உன்னை திட்டினேன் எருமை என்று சொல்ல அதான் திட்ட வரலையே அப்புறம் ஏன் புக்ல படிச்சு ஒப்பிக்கிற மாதிர ஒப்பிக்கிற... திட்டினால் முகத்தில் எக்ஸ்பிரஸன் இல்லையே என்று கேட்டு விட்டு மீண்டும் சிரிக்க என்னை பார்த்தா உனக்கு இளக்காரமாக இருக்கிறது அப்படி தானே.... நான் என் மனதில் உள்ள பீலிங்கை சொன்னால் நீ என்னை கிண்டல் செய்கிறாய் என்று சொல்லிவிட்டு கோபமாக திரும்பி அமர்ந்து கொண்டாள் சந்தியா.
ஜனனியும் சந்தியாவும் பேசிக் கொள்வதைப் பார்க்கும் பொழுது சிறு குழந்தையைப் போல சண்டை போடுவது போல் சலிப்பு தோன்றினாலும் அவர்களின் அன்பின் ஆழமும் புரிந்துகொள்ளும் தன்மையும் வியக்கத்தான் வைக்கிறது என்று தூரத்திலிருந்து கண்சிமிட்டி கொண்டிருந்த இரண்டு நட்சத்திரங்கள் சொல்லிக் கொண்டன.
ஆமாம் என்று பதிலுக்கு பேசிய மற்றொரு குட்டி டுவிங்கிள் ஆனாலும் இந்த ஜனனி சென்னையில் இருக்கும்போது இந்த குழந்தைத்தனமும் வெகுளி பேச்சு மாறி வயது முதிர்ந்தவளைப்போல வித்தியாசமாக தெரிகிறதே... அது எப்படி என்று தன் சந்தேகத்தை கேட்டது.
அது தெரியாதா இந்த மனிதர்கள் அனைவருமே அப்படிதான். நேரத்திற்கு தகுந்தாற் போல தங்களை மாற்றிக் கொள்வார்கள்.