Page 3 of 3
டீப்பாயையும் கடன் வாங்கி வந்து கூடத்தில் போட்டு வைத்திருந்தான் கைலாஷ். அர்ச்சனா தனக்குத் தெரிந்த கோலங்களை அலங்கோலமில்லாத வகையில் வாசலில் போட்டிருந்தாள்.
பார்வதி இருக்கும் பொருட்களைக் கொண்டு, மோசமில்லாத வகையில் பலகாரங்களைப் படைத்திருந்தாள்.
தேவநாதன் மாப்பிள்ளை வீட்டாரிடம் என்ன பேசுவது?...எப்படிப் பேசுவது?..என்பதையெல்லாம் மனசுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்.
பரபரப்பாக அவர்கள் அனைவரும் இயங்கிக் கொண்டிருந்த அந்தக் காலை வேளையில், அவர்கள் எல்லோரின் அடி வயிற்றிலும் அமிலத்தைப் பாய்ச்சுவது போல், சம்பூர்ணத்தின் கர்ண கடூரக் குரல் வெளியே ஒலிக்க ஆரம்பித்தது.
தொடரும்...
Next episode will be published on 14th Nov. This series is updated weekly on Saturdays.