பார்த்தேன்."
"அதுக்கும் முன்னாடி… ரூமிலிருந்து வெளியே வந்தபோது என்னை பார்த்து விட்டாள்… அப்படி ஒரு லுக் கொடுத்தாள் பாரு… நான் என்ன தப்பா சொன்னேன். ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டான்டிங்தானே… அப்புறம் மன்னிப்பு கேட்க கூட போனேன் .."
'அடப்பாவி அந்த பசுமை குடில் விஷயத்தையை மறந்து விட்டாயே… அதை ரேச்சல் கேட்டிருக்கிறாள் என்பது உனக்கு தெரியாது அல்லவா அதுதான் … அப்படியே ஓவர் லுக் பண்ணலாம்னு நினைக்கிறாய்…' என்று நினைத்த ரஞ்சன்...
ஆனால் இப்போது இதனை சொல்வது சால பொருத்தமாக இருக்காது. ஏற்கனவே ரஞ்சன் இமேஜ் டாமேஜ் ஆகி இருக்கிறது… எனவே..
"சத்தி இவ்வளவு சீரியஸ்ஸா நீ சொல்றதை பார்த்தால்… சம்திங் ஃபிஷ்ஷி… சீக்கிரமா ஒரு முடிவிற்கு வா…." ஆலோசனை சொன்னான்.
"நாங்க நாளைக்கு ரேச்சலை டாக்டர் வத்சலாவிடம் அழைச்சிட்டு போகலாம்னு இருந்தோம். அவரை கன்சல்ட் பண்ணிட்டு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்னு ப்ளான் பண்ணியிருந்தோம்…"
"யூ கேரி ஆன்.. ஜெமி… அதுவும் நல்ல திட்டம்தான். எனக்கும் அடுத்து என்ன செய்யனும்னு யோசிக்க டைம் கிடைக்கும்" என்று சத்யன் சொன்னான்.
அதற்குள் வீடு வந்துவிட… இருவரும் இறங்கி விட்டனர்.
"வேற ஏதாவது சொல்லனும்னா கால் பண்ணுங்க ப்ரோ" என்று ஜெமி சொல்லி விடைபெற்றான்.
யோசனையுடன் நடந்த சத்யனிடம் ரஞ்சன் ரேச்சலின் லேட்டஸ்ட் கோபத்திற்கான காரணத்தை சொல்லி விட்டான். இப்போது சத்யனுக்கு புரிந்து விட்டது. ஏற்கனவே தத்தளித்துக் கொண்டு இருந்த அவனுடைய காதல் படகு மூழ்கியே போய் விட்டது என்பது… இனி ரேச்சலான மீராவை நெருங்குவதும் சிரமமாகி விட்டதே…!
இதென்ன ஒவ்வொரு நொடியும் அவன் வாழ்க்கை இடியாப்ப சிக்கலாகி வருகிறதே... இதற்கிடையே அவனை ஏதோ ஒரு விஷயம் வேறு வைப்ரேட் செய்து கொண்டே இருக்கிறதே...
வீட்டிற்குள் வந்த பின்னும் சத்யனுக்கு தலைக்குள்ளே எதுவோ குடைந்து கொண்டே இருந்தது… அதை கண்டுபிடித்தாக வேண்டும்..
படுக்கையில் அமர்ந்து கண்களை மூடி அமைதியாக யோசித்தான்.
இந்த குறுகுறு ஃபீலிங் எப்போது வந்தது… மீரா அறையிலிருந்து வெளியே வரும்போது இல்லை… அவனை பார்த்தும் பாராமல் நடந்தபோதும் இல்லை… கல்பியை பார்த்து விட்டு வந்த போதும் இல்லை… நந்தினி வந்த போதும்….