போனான்.
"அவள் தூங்கறாளா… அவுட்டிங் கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்…" ரேச்சலை பார்த்துக் கொண்டே பேசினாள்.
"ஓ…" சத்யன் பொதுவாக ஓ சொன்னான்.
"மனு என்னை அம்மானு சொல்ல பழக்கனும்னுதான் இந்த அவுட்டிங் ஐடியா…"
"ஓ…"
இந்த ஓ சொன்னது ரேச்சல்…
"ஆமாம்… அவள் என்னை சித்தினு கூப்பிட்டால் ஐ டோன்ட் லைக்… அம்மானு சொன்னாதான ஸ்வீட்டா இருக்கும். சரிதானே டார்லிங்"
சுத்த்...தம்…! அவனை சல்லி சல்லியா ஆக்காமல் விட மாட்டாள் போலிருக்கிறதே…
ரேச்சலை பார்த்தவள் … சத்யனிடம் திரும்பி,
"இவங்க யார் டியர்.." என்றாள்.
"இவங்க பக்கத்து வீடு… ரேச்சல்… நந்தினியோட ஃப்ரென்ட். " புதியவர்களை அறிமுகம் செய்வது சபை நாகரிகம் அல்லவா?
ரேச்சலை பார்த்து..
"இவங்க தனலட்சுமி…" அவன் முடிக்கும் முன்னே குறுக்கிட்ட தனு…
"ஓ… நோ.. தனுன்னு சொல்லுங்க… அத்தானை நான்தான் கல்யாணம் செய்துக்க போறேன்.." அறிவித்தாள்.
" தெரியுது… அதான் சொன்னீங்களே மனுவிற்கு சித்தினு…" இந்த முறை ரேச்சலிடம் இருந்து வார்த்தைகள் அழுத்தமாக வந்தன..
"நோ… சித்தி…! அம்மானு சொல்லனும். மனுவோட அம்மாதான் ஓடி போயிட்டாளே… ஆனால் அவள் செத்து போயிட்டதா எல்லோரும் சொல்லுவாங்க… நான் நம்ப மாட்டேன். பேய் செத்து போகுமா என்ன?"
அதை ஏம்மா பிசாசுகிட்டயே கேட்கற…?..
"ஆஹாங்.. உங்களோட இந்த அம்மா ரோல் மனுகுட்டிக்கு தெரியுமா…?" ரேச்சல் விசாரித்தாள்.
'ம்… அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். என்னை விடவே மாட்டாள்… மை பேபி"
தனு சொல்வதை கேட்டால் மனுகுட்டி கடித்து வைக்கும்… அதை மறைத்து ஓவரா சீன் போடறாளே… கணவனை விட்டு கொடுத்தாலும் பெற்ற பிள்ளையை விட்டுக் கொடுக்காத சிங்கதாய் கிட்ட அப்படி சொல்லக் கூடாதும்மா… 'மை பேபியா' அச்சோ.. மனுவோட அம்மாவும் சேர்ந்து கடித்து வைப்பாளே… சத்யன் மைன்ட் வாய்ஸ் முடித்து லைவ்விற்கு