(Reading time: 39 - 77 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

ஆஹாங்… அப்போதுதான் அவன் அந்த ஃபிஷ்ஷியை உணர்ந்தான்ம்மனுகுட்டி மீராவிடம் தாவினாள்அவள் குழந்தையை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொஞ்சினாள்அப்போது…. என்னவோ சொன்னாளே

அலளுடைய உதட்டசைவை ரீகால் செய்தான்… அது… 'மின்னு மோளே' என்றாளா….? அது மீராவிற்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்

மின்னு... மூன்று வயதான   அழகான குட்டி தேவதைஅவன் சந்தித்த முதல் பெண் குழந்தைகண்களை விரித்து இதழ் பிரித்து குறுநகை விரிய எதையோ சொல்ல நினைத்துஉதடுகள் பிதுக்கி 'அம்மே' என்று அழுதுஅவனுக்கு வேறு ஒரு அழகான உலகத்திற்கு வழிகாட்டியவள்...

திருமணமான காலகட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக இப்போதைக்கு குழந்தை வேண்டாம் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து பார்க்கலாம் என்று சத்யன் முடிவெடுத்திருந்தான். 

"மீரா, நந்துவிற்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லைஅதற்குள் நமக்கு பிறந்தால் நல்லாயிருக்காதுஇப்பதான் நான் புது ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு இருக்கேன்நீயும் உன்னுடைய பிஸினஸை கவனிக்கனும்எல்லாத்துக்கும் மேல உன்னை ரொம்பவும் காதலிச்சு போராடி கல்யாணம் பண்ணியிருக்கேன்அந்த காதலை கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணனும். இடையில் குழந்தை வந்தால் நீ பேபியோட பிஸி ஆயிடுவஅதனால்…" என்று சொல்லமீரா வழக்கம்போல தன் மனதை மறைத்து அவன் சொன்னதற்கு தலையை ஆட்டி வைத்தாள்.

எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மீராவுடன் சுற்றுலா சென்று விடுவான். அது ஒரு ரிலாக்ஸேஷன்தான்

அதுபோல ஒருமுறை அவர்கள் மூணாறு ட்ரிப் சென்றிருந்தபோது மாலை குளிரை ரசித்தபடி அருகிலிருந்த பூங்காவில் சுற்றிக் கொண்டு இருந்தனர்.  அப்போதுதான் அந்த 'மின்னு மோள்' குண்டு குண்டு விழிகளும்.. ஆப்பிள் கன்னங்களுமாகஅழுதபடி  அவர்களிடம் ஓடி வந்து ஒட்டிக் கொண்டாள்.

"பாப்பா பேர் என்னநின்ட அச்சன் அம்மை எவிட.. " என்று அவர்கள் விசாரிக்க குழந்தை மின்னு மோள் என்றது. எதை கேட்டாலும் மின்னுமோள் என்றது...

பெற்றோரை பிரிந்து வந்த குழந்தை என்பது புரிந்துபோய் அவர்களும் அங்கும் இங்குமாக சென்று விசாரித்தனர். அந்த குழந்தை யாரென்று யாருக்கும் தெரியவில்லை. போலிஸ் ஸ்டேஷனில் புகார் பதிவு செய்தனர். இரவாகி விட்டதால் அவர்களையே அந்த குழந்தையை வைத்திருக்க சொன்னார்கள்.

21 comments

  • Interesting story.. starting laye Rachel meera 2perum ontru entru therinthalum kathaiyai neengal kondu pona vitham tompa super... Ella charactersum manathil pathinthathu thani sirappu... Hero Hermione matum alla Ella charactersum tompa super.. rompave super... Nija kunathai maraithu vitu meeravai nintravaluku unmai gunathai katta Rachel character kidaithathu good... Really good one... :clap: good luck for ur next story

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.