நின்றான். அவளைப்போலவே ஒரு வித ஏக்கம் அவனுக்குள்ளும் பரவியிருப்பதை உணர்ந்து கொண்டாள். அந்த உணர்வே அவளுக்கு அவன் மேல் ஒரு வித உணர்வை ஏற்படுத்தி இருக்க அது இவ்விதமான உணர்வு தான் என்பது புரியாவிடினும் அவனின் அருகாமை மட்டுமே போதும் என்ற எண்ணம் நிலைத்து பதிந்துவிட்டது.
அவன் அருகாமையில் இருப்பதே போதும் என்ற எண்ணமே அவளுக்கு மன நிறைவையும் தந்தது. அந்த இரவு முழுவதும் அவன் குயிலியின் வீட்டில் இருந்தபோது அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்த பெண்னவளுக்கு எத்தனை சோதனை வந்தாலும் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையோடு ஓரளவு சிறுவயதில் நடந்தவைகளை நினைவுக்குக் கொண்டு வந்ததால் ராகவ் மீது வந்து இருந்த உணர்வு பன்மடங்காகப் பெருக தொடங்கியது.
தன் வாழ்க்கையே அவன் தான்... அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற முடிவோடு அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள்.
காதலை உணர்ந்த அந்த நாளே அவனது அன்பை இழந்துபோன நாளாக மாறாக இதயமே உடைந்து போனது பெண்ணவளுக்கு. ஆனால் அவளது பொறுப்புகளை அவள் உணர்ந்ததால் காதல் என்ற உணர்வின் பிடியில் இருந்து சற்று வெளியே வந்து இருந்தாள். ஆனாலும் முழுவதுமாக அவனை மறக்கவும் முடியாமல் தடுமாறினாள்.
இத்தகைய கடினமான சூழ்நிலையில் அவன் துணையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று மனதில் ஒரு முனையில் ஆசை தோன்ற அவனது விலகல் அவளுக்குள் ஒரு வலியை ஏற்படுத்தியது. அவன் அருகில் இல்லாவிட்டாலும் ஆறுதலாய் ஒரு வார்த்தை பேசினால் போதும் என்ற ஒரு ஏக்கம் ஆழ் மனதில் தோன்ற அவனிடம் பேசி விடலாமா என்ற நினைப்போடு தன் அலைபேசியை எடுத்தாள். ஆனாலும் அவனது சூழ்நிலை எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. அதனால் அவனுக்கு அழைத்து ஆபத்து ஏற்படுவதை விட ஆசிர்வாதம் தாத்தாவை நேரிலேயே அனுப்பி வைக்கலாம் என்ற முடிவோடு மீண்டும் படியேறி ஆசீர்வாதம் தாத்தாவை நோக்கி நடந்தாள்.
அவள் கால்கள் கடமையே என்று படிகளில் மேல் அடி எடுத்து வைத்தாலும் அவள் கண்டறிந்த உண்மை அவளை சுடத் தான் செய்தது. அவள் மனம் கலங்கியது. அருகில் கண்முன்னே தந்தை இருந்தாலும் இதுதான் தந்தை என்று தெரியாமல் அழிக்க துடிப்பவனையே தந்தை தந்தை என்று நினைத்து வாழும் ராகவ்வின் நிலை குயிலிக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
பசுத்தோல் போர்த்திய புலி போல அப்பா என்ற அடைமொழிக்குள் ஒழித்துக்கொண்டு அழிக்கக் காத்திருக்கும் கயவர்களை நினைக்கும் போது ஆத்திரம் அளவுகடந்து பெருகியது. பழைய நினைவுகளை மறந்து கார்த்திக் என்ற உண்மையை மறந்து மாய உலகத்தில் வாழ்பவனை