புரட்ட அதற்கான விடையும் அடுத்த அடுத்த பக்கத்தில் இருக்க அதிசயித்து போனாள்.
இனி மழையோ வெயிலோ புயலோ வறட்சியோ கவலையே வேண்டாம். எல்லாவற்றையும் சமாளிக்க வழி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதோடு இயற்கை உரம் மண்ணிற்கு பாதிப்பு இல்லை. இனி ஒவ்வொரு போகமும் விளைச்சல் நன்றாக இருக்கும். மகசூல் கிடைக்கும். இனி விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி தான் என்று எண்ணிக்கொண்டு அடுத்த பக்கம் திரும்பினாள்.
குழலி நீயும் கார்த்திக்ம் சேர்ந்து இந்த பார்மூலாவை நேர்மையான அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் அது நமது விவசாயிகளுக்கு பயன்படும். இல்லை என்றால் அதை வெளிநாட்டினருக்கு விற்று விடும் அபாயமும் ஏற்படலாம். அதனால் கவனமாக செயல்படுங்கள் என்று அறிவுரை கூறப்பட்டு இருக்க அந்த பைலை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.
வாட்ச்சை பார்த்தவள் இன்னும் சிறிது நேரத்தில் வண்டி வந்து விடும் என்று வண்டிக்காக காத்திருந்தாள்.
அதே நேரத்தில் அவளது வண்டி அவளை நோக்கி வர அவளும் வண்டியையே பார்த்து கொண்டு நின்றாள்.
வண்டி டிரைவர் அவளை அழைத்து வந்தவர் தான். ஆனால் அவரைத் தவிர வண்டிக்குள் வேறு சிலரும் இருப்பது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை தான். அதனால் வேறு யாரும் தன்னை பார்க்கும் முன்னால் வண்டி அருகில் வந்து விடட்டும் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அருகில் வண்டி வரவும் அவள் ஏறுவதற்காக அருகில் செல்லவும் துளியும் அவள் எதிர்பார்க்காத விதமாக அந்த வண்டியில் இருந்த ஒருவன் ஸ்டன்கன்னால் குயிலியை சூட் செய்ய அவள் நிலை தடுமாற அதற்குள் மற்றொருவன் அவளை பிடித்து உள்ளே இழுத்துக் கொள்ள மற்றொருவன் அவள் கையிலிருந்த ஃபைலை பிடுங்கி கொண்டான். பிறகு டிரைவரை அங்கே இறக்கி விட்டு விட்டு அந்த வண்டி வேறு திசையில் பயணமானது.
மயக்க நிலையில் இருந்தாலும் அவள் உதடுகள் கார்த்திக் கார்த்திக் என்று உச்சரிக்க அதை கவனித்த ஒருவன் இந்த நிலையிலும் கார்த்திக் தேடி வருவான் என்று எதிர்பார்க்கப்படுகிறாளே... வெரி கிரேட் என்று சொல்ல வேறு ஒரு காருக்கு மாறினார்கள். அந்த கார் மும்பை நோக்கி பயணத்தை தொடங்கியது.
மும்பை....
ராகவ்... எல்லாம் ரெடி... கடற்பயணத்துக்கு தேவையான எல்லாவற்றையும்