(Reading time: 8 - 16 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 02 - முகில் தினகரன்

துவரையில் “உர்”ரென்றிருந்த மேனேஜரின் முகம் காவ்யாவைக் கண்டதும் உற்சாகமானது.  “வாம்மா காவ்யா!...உட்காரும்மா!” வார்த்தைகளில் ஜொள் வடிந்தது.

“பரவாயில்லை சார்” என்றாள் நின்றபடியே சொன்னாள்.

“இட்ஸ் ஓ.கே.!” என்ற மேனேஜர் தேவநாதன், “பை த பை...நம்ம ரவீந்தர் பொள்ளாச்சிக்கு மாற்றல் ஆகிறார்...அநேகமா...இந்த வார சனிக்கிழமை வரைதான் அவர்  இங்க வருவார்!...அதனால்...அவருக்கு நம்ம பொள்ளாச்சி ஆபீஸோட அட்ரஸ்...போன் நெம்பர்...அங்க வேலை பார்க்கிற ஸ்டாப்ஸ்களோட பெயர், பதவி போன்ற விபரங்களை ஒரு பிரிண்ட் எடுத்துக் குடுத்திடுங்க!...”

ரவீந்தர் டிரான்ஸ்பர் ஆகிறார், என்கிற செய்தி அந்தக் காவ்யாவின் முகத்தில் கடும் சோக அதிர்வுகளைத் தந்ததை அந்த மேனேஜர் கவனியாமல் இல்லை. நன்றாகவே கவனித்திருந்தார். “ஒரு வேளை இந்தப் பொண்ணுக்கும்...அவனுக்கும் நடுவில் ஏதாச்சும் உறவு இருக்கோ?...ரெண்டு பேரும் லவ்வர்ஸோ?...இல்லையே?...அப்படி இருந்திருந்தா அந்த ரவீந்தர்ப்பயல் இன்னேரம் என்கிட்டே உளறியிருப்பானே?...அது மட்டுமில்லை...பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் சொன்னப்ப சந்தோஷமா ஏத்துக்கிட்டானே?...ஒருவேளை லவ் இருந்திருந்தா மறுத்திருப்பான் அல்லவா?” 

“ஓ.கே.சார்!..நான் பிரிண்ட் அவுட் எடுத்துக் குடுத்திடறேன் சார்” என்றவாறே அவள் வெளியேறத் திரும்ப,

“காவ்யா....ஏன் உன் முகம் டல்லடிக்குது?” வேண்டுமென்றே அவள் வாயைக் கிண்டினார்.

“இல்லையே சார்...நான் நார்மலாய்த்தான் இருக்கேன்” சிரமப்பட்டு தன் முகத்தை இயல்புக்குக் கொண்டு வந்தாள்.

“காவ்யா!...எனக்கு வயசு ஐம்பத்தியெட்டு...என்னோட அனுபவத்திற்கு வயசு எண்பத்தியெட்டு...ஸோ...என் கிட்ட யாரும் பொய் சொல்ல முடியாது!...அப்படியே பொய் சொன்னாலும் அதை நான் உடனே கண்டுபிடித்து விடுவேன்...இப்ப நீ பொய் சொல்லியிருக்கே!ன்னு என் ஆறாவது அறிவு சொல்லுது!...பட்...நான் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன்!...ஏன்னா...ஒருவேளை அது...என் கிட்ட சொல்ல முடியாத விஷயமாய்க் கூட இருக்கலாம்!..” நாகரீகமாய்ப் பேசியவர், அவள் கதவருகே சென்ற போது, “டேக் கேர் காவ்யா...கண்டதையும் நினைச்சு மனசையும்...உடம்பையும் கெடுத்துக்காதே” என்றார். போகும் அவளின் பின்னழகை ரகசியமாய் ரசித்தார்.

தன் இருக்கையில் வந்தமர்ந்த காவ்யா, தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.  “ச்சே...என்ன பொண்ணு நான்?....இப்படியா வெளிய தெரியற மாதிரியா சோகத்தைக் காட்டுவாங்க!...அந்த மேனேஜர் ஏற்கனவே “ஸ்பீக்கர் வாயன்”...அப்பட்டமா வெளிய தெரிஞ்ச என் சோக முகத்துக்கு

2 comments

  • Kavi seems tobe too expressive... avanga expression parthey ellarum matter guess panurangale 😁😁 but that jollu manager is too much 👊👊👊 hero transfer agitta ivanga soga geetham pada vendumo :o interesting update sir.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.