(Reading time: 8 - 16 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

வித விதமா கற்பனை பண்ணி...கதை வசனமெல்லாம் எழுதிடுவானே?”

“என்ன காவ்யா?...மேனேஜர் ரூமிலிருந்து வெளிய வந்தப்பவே கவனிச்சேன்...உன் முகம் ஒரு மாதிரி இருந்திச்சு!...என்ன செம டோஸா?” பக்கத்து சீட் பரிமளம் கேட்க,

“சேச்சே...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை...ஒரு வேலை குடுத்தார் அவ்வளவுதான்”

“முகமே மாறிப் போகும் அளவிற்கு அப்படியென்ன வேலை குடுத்தார்?” விடாமல் குடைந்தாள் பரிமளம்.

“அதோ அந்த மார்க்கெட்டிங் செக்‌ஷன்ல இருக்கற யாரோ ஒருத்தர் பொள்ளாச்சி பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் ஆகிறாராம்!...அவருக்கு அட்ரஸ் டீட்டெய்ல்ஸ் எடுத்துக் குடுக்கச் சொன்னார் அவ்வளவுதான்” அந்த மாற்றல் ரவீந்தருக்கு என்பது தெரிந்தும் தெரியாதது போல் சொன்னாள் காவ்யா.

“அப்படியா?...யாருக்கு டிரான்ஸ்பர்?” விழிகளைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள் பரிமளம்.

“என்னமோ பேர் சொன்னார்...ரவிச்சந்திரனோ...ரவீந்தரோ...” வேண்டுமென்றே நடித்தாள் காவ்யா.

“ஓ...ரவீந்தருக்கா?...பொள்ளாச்சிக்கா?...சூப்பர் ஊரு” என்றாள் பரிமளம்.

“அப்படியா?...அப்ப ஒண்ணு செய்...நீயும் அதே ஊருக்கு டிரான்ஸ்பர் கேட்டு...வாங்கிட்டுப் போ!...ஹும்...சரியான ஜொள்ளு பார்ட்டிடி நீ!”என்றாள் காவ்யா.

“மேனேஜ்மெண்ட் மட்டும் “சரி”ன்னு சொல்லட்டும்...தாராளமாய்க் கேட்டு வாங்கிட்டுப் போயிடுவேன்!...அவன் கூட ரொமான்ஸ் பண்ண யாருதான் மறுப்பாங்க?” என்றாள் பரிமளம்.

அதைக் கேட்டதும் உள்ளுக்குள் பொங்கி வந்த சினத்தை அடக்கிக் கொண்டு, “ஏன்?...அவன் மேல் அத்தனை கிரேஸா உனக்கு?” காவ்யா கேட்டாள்.

“யெஸ்...அந்த ராஸ்கல் கிட்டே ரெண்டு தடவை என்னோட காதலைச் சொல்லிட்டேன்!...பயல்... எந்த பதிலும் சொல்லாமல்...மழுப்பிட்டே போயிட்டான்!..” வருத்தமாய்ச் சொன்னாள் பரிமளம்.

அதைக் கேட்டு உள்ளூர சந்தோஷித்துக் கொண்ட காவ்யா, “அப்படின்னா அவனுக்கு உன் மேல் இஷ்டமில்லை”ன்னு அர்த்தம்!...விட்டுடு...விட்டுடு!...உனக்குன்னு ஒருத்தன் எங்காவது பொறந்திருப்பான்...நிச்சயம் உன்னைத் தேடி வருவான் அது வரைக்கும் வெய்ட் பண்ணு” என்றாள்.

“ம்ம்ம்...அது கிடக்கட்டும் ஒரு பக்கம்!...ஆனா...அந்த விஸ்வாமித்திரரை என் வலையில் விழ வைக்காமல் ஓய மாட்டாள் இந்த பரிமளம்!...அதுக்கு ஒரு ஐடியாவும் வெச்சிருக்கேன்...அவன் அடிக்கடி ரெக்கார்ட் ரூமுக்குப் போய் பழைய கொட்டேஷன் ஃபைலை எடுத்து பழைய ரேட்டை ரெஃபர் பண்ணுவான்...அந்த மாதிரி ஒரு நாள் ரெக்கார்ட் ரூம்ல்...அவன் தனியா இருக்கும் போது உள்ளார பூந்து...வலுக்கட்டாயமா ஒரு உம்மா குடுத்திடப் போறேன்!”  உணர்ச்சி பொங்கச் சொன்னாள் பரிமளா.

2 comments

  • Kavi seems tobe too expressive... avanga expression parthey ellarum matter guess panurangale 😁😁 but that jollu manager is too much 👊👊👊 hero transfer agitta ivanga soga geetham pada vendumo :o interesting update sir.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.