தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 24 - ஜெய்
எல்லாரும் கார்த்திகை தீபம் நல்ல முறையில் கொண்டாடி இருப்பீங்கன்னு நம்பறேன்... கொரோனா அப்படிங்கற இருள் அகன்று ஆரோக்கியம் அப்படிங்கற ஒளி எங்கும் பரவ இறைவன் அருள் புரியட்டும்... அடுத்த அத்தியாயத்தோட மைத்திக்கு bye சொல்லப் போறோம்.... இது சின்ன கதைதான்... இந்த அப்டேட்ல பாட்டி தையல் கடை வச்சே பணக்கஷ்டதை சரிப்பண்ணிட்டாங்களான்னு ஒரு கேள்வி வரும்.... இது கதைக்காக வச்சது இல்லை... நிஜமாகவே என் குடும்பத்தில் நடந்தது... என் அம்மாவின் அத்தை பெண்ணின் கணவர் அவருடன் வேலை செய்பவருக்கு வங்கியில் கடன் வாங்க surety கையெழுத்து போட்டிருந்தார்.... கடன் வாங்கிய நபர் பணம் கிடைத்தவுடன் ஆள் அட்ரஸ் இல்லை... இவர் கையெழுத்து போட்டதால் வங்கி இவரை பிடித்துக்கொண்டது.... லட்சக்கணக்கான பணம்... அவரை வேலையையும் விட்டு தூக்கி விட்டார்கள்... அப்பொழுது கணவன், மனைவி இருவருமாக சமையல் வேலை, பட்சண வேலை செய்துதான் வங்கிக்கு கடனை அடைத்தார்கள்... இரவு, பகல் பாராத உழைப்பு... ஆகவே உழைப்பிருந்தால் எதுவும் சாத்தியமே.... அடுத்து final epi-யுடன் சந்திக்கிறேன்.... அப்பறம் குறைகள் இருந்தால் கண்டிப்பாக சொல்லுங்க.... கண்டிப்பா கடைசி அத்தியாயத்தில் திருத்திடறேன்...
மத்தியத் தர மக்களுக்கும், கீழ் மத்தியத் தர மக்களுக்கும் வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததே... மிகவும் கீழேயும் இறங்க முடியாது.... அதே போல் மேலேயும் போக முடியாது... செலவுகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே.... சில நேரங்களில் மிகவும் கீழ்மட்ட நிலையில் இருப்பவர்கள் பாடு தேவலாம்... அவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்... அதே போல் மேல் நிலையில் உள்ளவர்களையும்.... ஆனால் இந்த நடுத்தர மக்கள் அனைத்தையும் சமாளிக்க வேண்டும்... உறவுகளின் மத்தியில், நண்பர்களின் மத்தியில் என்று தங்கள் நிலை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.... அவர்கள் மத்தியில் எந்த சொல்லும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... தங்கள் இன்னல்களை மறைத்து இன்முகம் காட்ட வேண்டும்.... இப்படி ஏகப்பட்ட வேண்டும்கள்...
இங்கு மைத்தியின் குடும்பமும் இப்பொழுது இந்த நிலையிலேயே உள்ளது... இருவர் சம்பளம் ஒருவர் சம்பளமாக குறைந்து அன்றாட வாழ்வியலுக்கே பற்றாக்குறை ஏற்படும் நிலையில் மைத்தியின் பயிற்சிக்கு எங்கனம் செலவு செய்வது... அதுவும் கிரிக்கெட் பயிற்சிக்கு ஆயிரக்கணக்கில் எடுத்து வைக்க வேண்டும்...
போட்டிகளுக்கு முன்னால் மட்டுமே வீரர்களின் பயிற்சிக்கு அரசாங்கம் செலவழிக்கும்... மற்றபடி வீரர்கள் அவர்களாகவோ இல்லை ஸ்பான்ஸர்கள் மூலமாகவோ தங்கள்