சிந்தித்து பேரம் பேசி ஒரு தொகையை நிர்ணயம் செய்து மற்றவர்களை ஒப்புக்கொள்ள வைக்கலாம்.
அதேபோல, பத்து ஓனர்களும் அவர்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு அதிகாரம் தந்து பேரம் பேசி முடிவு எடுக்க வைப்போம்.
அவர் முடிவை மற்ற ஒன்பது பேரும் கேள்வி கேட்காமல், மறுப்பின்றி, சந்தோஷமா ஏத்துக்கணும்.
அந்த ஒருவருடன் துவக்கத்திலேயே, மற்ற ஒன்பது பேரும் கலந்து பேசி பேச்சு வார்த்தையின்போது எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கலாம் என்று முடிவு சொல்லியே அனுப்பலாம்.
உதாரணமா, அவங்க முழுத் தொகை ஐம்பது லட்சத்தையும் கேட்கறாங்க. நம்ம பத்து ஓனர்கள் ஒரு லட்சம் தர தயாராயுள்ளாங்க
இந்த ரெண்டு தொகை களுக்கு நடுவிலே, ஐந்தோ, பத்தோ, பதினைந்தோ, இருபதோ, ஒரு தொகையை முடிவு செய்து, அந்தத் தொகைக்கு உள்ளே சமரசம் பண்ணிக்கச் சொல்லுங்க!"
" தலைவரே! நீங்க சொல்கிறபடியே செய்கிறோம்........"
பத்து பேரும் கூடிப் பேசி ஒருவரை தேர்ந்து எடுத்தார்கள். ஆனால், எந்த தொகைக்குள் ஒப்புக்கொள்ளலாம் என்பது முடிவு செய்ய முடியவில்லை.
" தலைவரே! இதெல்லாம் சரிப்பட்டுவராது. வேற வழி ஏதாவது சொல்ல முடியுமா?"
" பொதுவான ஒருவரை சமரசம் செய்துவைக்கச் சொல்வோமா?"
" சொல்வோம்"
" செட்டியாரின் வக்கீல் உங்களுக்காக பேசி முடிவு எடுத்தால், அதை நீங்க ஒப்புக்கொள்வீர்களா?"
" ஓ.கே." நிரஞ்சன் வக்கீலுக்கு போன் செய்து பேசினார். அவரும் ஒப்புக்கொண்டார்.
தொடரும்
Next episode will be published on 15th Dec. This series is updated weekly on Tuesday mornings.