தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 11 - ஜெபமலர்
அஸ்விட் கோபம் சந்தியாவை கலக்கமடைய செய்தது. ஸ்வீனா இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ தெரியவில்லையே. ஜனனி பற்றி தவறாக புரிந்து கொண்டு இந்த கடைசி நிமிடத்தில் திருமணம் நின்று விட்டால் என்ன செய்வது என்று பலவாறு யோசித்து கொண்டே நின்றாள்.
அஸ்வித் உங்களுக்கு கோபப்பட கூட தெரியுமா... இவ்வளவு நாளா சாக்லேட் பேபி என்று நினைத்தேன். இப்போ தான் தெரியுது.. நீங்க செம்ம ஹாட் என்று... எப்படி இருந்தால் என்ன... என்னோட அஸ் சிரித்தாலும் சினந்தாலும் செம க்யூட் தான். லவ் யூ பேபி என்று அவன் கன்னத்தில் மெல்ல தன் இதழை பதித்தாள் ஸ்வீனா.
அவளின் இனிமையான முத்தத்தில் அஸ்விட் கோபம் சற்று குறைந்திருந்தது. சொல்லு... ஸ்வீட் ஹார்ட்.. உனக்கு ஜனனி பற்றிய இந்த செய்தி முன்னரே தெரியுமா.
தெரியும். ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இது உண்மையான செய்தி இல்லை.
உண்மையானது இல்லை என்று எப்படி உறுதியாக சொல்கிறாய் என்று அஸ்விட் சந்தேகத்தில் எங்கேயோ பார்த்து கொண்டு நின்றான்.
ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் ஸ்வீனா, அஸ்... அந்த பேப்பரை வேறு யாரும் பார்க்கவில்லையே என்று சொல்லிக்கொண்டே அவசரமாக அவன் கையிலிருந்து பிடுங்கி கொண்டாள்.
அஸ்விட் கேள்வியாக அவளைப் பார்க்க ஜனனி ஆறு மாதம் சிறையில் இருந்தது உண்மை தான். ஆனால் அவள் எந்த தவறும் செய்யவில்லை என்பது தான் உண்மை. இதற்கு பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஜனனியின் வாழ்க்கை வரலாறையே உங்களுக்கு சொல்ல வேண்டும். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் இந்த திருமணத்தில் சந்தோசமாக கலந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் இப்போது உங்களுக்கு முழு காரணத்தையும் கூறுகிறேன்.
ஓகே.. ஸ்வீட் ஹார்ட்... யுவர் விஸ்... நீ எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் என்று நம்புகிறேன் என்றவன் சரி... நீ ஏன் என்னை தேடி கொண்டிருந்தாய்.
நானா... நான் உங்களை தேட வில்லையே.
நீ என்னை தேடினாய் என்பது எனக்கு தெரியும்.. சரி சொல் என்ன விஷயம்...
அது என்று இழுத்தவள் அஸ்... இந்த சந்தியா தனா அண்ணாவை நன்கு தெரிந்தது போல பார்த்து வைத்தாள். இல்லை இல்லை.. இளித்து வைத்தாள். ஏற்கனவே அண்ணாக்கு ஜனனி மேல் விருப்பம் இல்லை. அதில் இந்த சந்தியா வேற இப்படி பார்த்து வைத்து கூட கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தி விட்டுவிட்டாள் என்று சலித்துக்கொண்டாள்.