(Reading time: 12 - 24 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

யாருக்கும் தெரியாமல் அவளை மீண்டும் அமர வைத்து விட்டாள்.

ஏம்மா... பெண்ணே போடச் சொன்னால் இப்போதுதான் புதுசா மாப்பிள்ளையை பார்க்கிற மாதிரி அவரையே பார்த்துக்கொண்டு இருக்கிறாயே... சீக்கிரம்மா என்று சொல்ல அவர் காட்டிய இடங்களில் ஜனனி என்று கையெழுத்துப் போட்டுவிட்டு தன் ஓரக்கண்களால் அவனையே பார்த்தாள்.

அவள் பார்ப்பது தெரிந்தும் அதை கவனிக்காதது போல அஸ்வித்திடம் பேசிக்கொண்டு அமர்ந்து இருந்தான் ஜனா. அவனுக்குமே அவளை பார்க்க வேண்டும் போல தான் இருந்தது. அன்றைக்கு பார்த்த ஃபேரி கேர்ள் விட இன்றைக்கு மணப்பெண் அலங்காரத்தில் தேவதையை மிஞ்சிய தேவதையாகவே தெரிந்தால் அவன் கண்ணுக்கு.

ஆனால் ஏதோ ஒன்று தடுக்க கட்டாயப்படுத்தி தன் விழிகளை அஸ்விட் முகத்தில் பதித்து அவனையே பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

இதுவரை சர்ட் டீ சர்ட்களில் பார்த்து இருந்தவனை இன்று மாப்பிள்ளைக்கு உரிய கோர்ட் சூட்டில் ட்ரிம் செய்த மேல் உதட்டை சிறிது தாண்டி அளவான அடர்த்தியான மீசையோடும் முழுவதும் மலித்த தாடியோடும் காற்றில் அவன் கேசங்கள் அழைப்பாய கண்டும் காணாமல் குறும்புத்தனம் செய்யும் விழிகளும் அவனை பேரழகனாக காட்டியது.

அவளையும் மறந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஜனனியிடம் சந்தியா.. பார்த்து விட்டாயா.. எப்படி இருக்கிறார் என்று கண்சாடையில் கேட்க ஜனனி வெட்கத்தில் நெளிய சந்தியா கட்டை விரலை உயர்த்தி காட்ட எதேச்சையாக திரும்பிய ஜனாவின் கண்களில் அது பதிந்து போனது.

உண்மை புரியாமல் அதை தவறாக எண்ணிய ஜனா மெதுவாக அவள் அருகில் குனிந்து நீயும் உன் தோழியும் கூட்டு களவாணி தானோ.. அதான் என்னைப் பார்த்ததும் வெட்கமே இல்லாமல் தோழியின் கணவன் என்றும் இல்லாமல் இளித்து வைத்திருக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து நாடகம் போட்டு தனுவையும் ஸ்வீனாவையும் ஏமாற்றி விட்டீர்கள். ஆனால் என்னை ஏமாற் முடியாது. இதோடு உன் ஆட்டம் முடிந்து என் ஆட்டம் துவங்கி விட்டது என்று மெதுவாக புன்சிரிப்புடன் கூற பார்க்கிறவர்களுக்கு அவர்கள் பேசி சிரிப்பது போல் இருந்தது. அதனால் அவர்களை கேலி செய்து சிரித்தார்கள். ஆனால் ஜனனிக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து அமர்ந்திருந்தாள்.

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

10 comments

  • Good morning dear Jeba! மூப்பின் காரணமாக, படித்துப் புரிந்துகொள்ள அதிக நேரம் ஆகிவிட்டது. ஆமாம், பல தொடர்கள், கவிதை, ஜோக்ஸ், ஒரே நேரத்தில் அற்புதமாக எழுதுகிற தங்கள் திறமை இறைவனின் பரிசு! தன் பலன் எங்களுக்கே! பிரமாதம்!
  • Pk2 is doing too much steam Sandhu pathi inoru vaati thappa sonnaru 👊👊👊👊😜 <br />Janu, dhana yarunu theriyama ready anangala :eek: this shows her love towards Thanu but indha pk oda understanding sari illaye....but azhagai rasiparam 😁😍 interesting update ma'am 👏👏👏👏👏👏 sweena is also aware of janu....waiing for the fb.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.