கேள்விகள் ஜனனிக்குள்ளும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
திருமணத்தை சர்ச்சிலேயோ கோவிலிலேயோ வைத்து நடத்தாமல் வீட்டிலேயே வைத்து எளிதாக முடித்து விட்டு ரிஜிஸ்டரரை அழைத்து திருமணத்தை பதிவு செய்துவிடலாம். இரண்டு நாள் கழித்து ரிசப்ஷன் வைத்துக்கொள்ளலாம். அதனால் மிகவும் நெருங்கிய உறவை மட்டும் அழைத்தால் போதும் என்று ஜனார்த்தனன் ஏற்கனவே ஸ்ரிக்ட்டாக கூறிவிட்டதால் அதற்கு ஏற்றபடி எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து இருந்தாள் ஸ்வீனா.
அதனால் திருமணத்தில் கூட்டம் அதிகமில்லை. ஜனனியின் உறவுகள் யாரையாவது அழைக்க வேண்டுமா என்று கேட்டதற்கு சந்தியா மட்டும் போதும் என்று சொல்லிவிட்டாள் ஜனனி.
சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று எதுவுமில்லாமல் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். மீண்டும் வந்திருந்தவர்கள் வாழ்த்துக்கள் கூற அவர்களுக்கு ஏற்ற வகையில் வாழ்த்துப்பாடல்கள் அரங்கேறியது. அதன் பிறகு சில சம்பிரதாயங்கள் சடங்குகள் நடக்க கெட்டி மேளம் என்ற சத்தம் கேட்க கீத வாக்கியங்கள் முழங்க ஜனா ஜனனியின் கழுத்தில் தாலி கட்டினான். ஜனனி மறந்து கூட அவன் முகத்தை பார்க்கவில்லை.
ஆனால் ஜனா ஜனனியின் காதருகே குனிந்து ஆல் தி பெஸ்ட்.... நினைத்ததை சாதித்து விட்டாயே என்றான்.
நினைத்ததை சாதித்து விட்டேனா... இவர் என்ன சொல்கிறார் என்று யோசித்தவள் எதுவும் புரியாமல் இன்னும் தலையை கவிழ்த்துக் கொண்டாள் ஜனனி.
இனி ரிஜிஸ்டர் செய்து விடலாம் என்று அவர்களை அழைத்து சென்று ரிஜிஸ்டிரர் முன்னால் அமர வைத்தாள் ஸ்வீனா.
அவரும் சில இடங்களில் ஜனார்த்தனனிடம் கையெழுத்து வாங்கினார். பின் ஜனனியின் பக்கம் நோட்டைத் திருப்பி இதில் உன் கையெழுத்தை வைம்மா என்று சொல்ல அவளும் தலையாட்டிவிட்டு அவர் குறிப்பிட்ட இடத்தில் கையெழுத்து வைக்க பேனாமுனையை இறக்க அவள் விழிகளோ அதற்குமேல் கையொப்பம் போட்டு இருந்த மணமகனின் பெயரை படித்துக்கொண்டிருந்தது.
மணமகனின் பெயருக்கு அருகே ஜனார்த்தனன் என்று இருக்க ஜனா என்று கையெழுத்து போடப் பட்டு இருந்தது.
ஜனா என்று அவள் உதடுகள் உச்சரிக்க அவள் விழிகள் அவள் கட்டளையை மறந்து அருகில் இருந்த அவனின் முகத்தில் பதிந்தது.
யார் இந்த ஜனா என்று ஆர்வத்தோடு பார்த்த விழிகளில் பிகே² என்று அவள் செல்ல பெயர் வைத்த அவர் அமர்ந்து இருக்க இதை எதிர்பாராத ஜனனி அதிர்ச்சியில் அமர்ந்து இருந்த சேரில் இருந்து எழ முயற்சி செய்ய இதை எதிர்பார்த்து இருந்த சந்தியா அவள் தோளை பற்றி