சரி விடு... ஜனாவை சீக்கிரம் சரி செய்து விடலாம். எனக்கு ஒரு விஷயம் சொல்றியா. இந்தத் திருமணம் வேண்டாம் என்று ஜனனி மறுத்துக் கொண்டே இருந்தது எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது இவ்வளவு சடனாக எப்படி ஜனனியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாய்.
அதுவா அது ரொம்ப சிம்பிள் அஸ்... ஜனனியின் ஒரே வீக் பாயிண்ட் தனுவின் பாசம் தான். அந்தப் பாசத்தை வைத்தே ஜனனியை சம்மதிக்க வைத்து விட்டேன் என்றாள்.
அதான் எப்படி...
தனுவை ஆபிஸ் கூட்டிட்டு வரும்போதெல்லாம் தனு தொல்லை படுத்துவதாக ஜனனியிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். அதுபோக அடிக்கடி அவளிடம் தனுவைப் பற்றி கோபப்பட்டு கொண்டே இருந்தேன். தனுவிடம் நான் ஒருநாளும் கோபப்பட்டது இல்லை. ஆனால் இதெல்லாம் ஜனனிக்கு தெரியாதே... நான் தனுவிடம் பாசமான நடந்து கொள்வதில்லை என்று எண்ணி ஜனனி தனுவிடம் அளவுக்கு அதிகமாக பாசம் காட்ட ஆரம்பித்துவிட்டாள்.
இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். சிறிது கோபத்தை தனுவிடம் காட்ட ஆரம்பிக்கும் போதெல்லாம் தனு ஜனனியிடம் சென்று ஒட்டிக் கொள்வாள்.
இப்படியே நாட்கள் போய்கொண்டிருக்க ஒருநாள் தனுவிடம் உன் அப்பா உன்னை கவனித்துக் கொள்வதே இல்லை. உனக்கு ஒரு அம்மா வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லை. பிசினஸ் பிசினஸ் என்று ஓடிக்கொண்டே இருக்கிறார். நான் எவ்வளவு நாள் தான் உன்னையே பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்று அலுத்துக் கொள்வது போல் நடித்தேன். அதை உண்மை என்று எண்ணிய தனு ஜனனியிடம் போய் நீங்க எனக்கு அம்மாவாக வர முடியுமா... நீங்களும் தனியாக இருக்கீங்க... அதனால் எனக்கு அம்மாவாக மாறிட்டா நாம ஒன்னா சந்தோஷமாக இருக்கலாம் என்று கேட்க அந்த நேரத்தில் ஜனனியால் அதை மறுத்து பேச முடியாமல் போய்விட்டது. ஒரு வழியாக ஜனனி சமாளிக்க தனு அடிக்கடி அதையே கேட்க ஆரம்பித்து விட்டாள். நானும் தனுவிடம் அதிகமாக கோபப்பட ஜனனியால் என்னை திட்டவும் முடியாமல் தனு சொன்னதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் திணறினாள்.
ஜனனி சிறைக்கு போய் விட்டு வந்த விஷயம்மறுப்பதற்கு காரணம் என்பதை புரிந்து கொண்டேன். அதனால் அவளிடம் பேச்சுக் கொடுத்து அவளுக்கு புரிய வைத்தேன். அவளும் சம்மதித்து விட்டாள்.
ம்ம்ம்... எது எப்படியோ நீ சொல்வது போல் எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரி. ஆனால் ஸ்வீட் ஹார்ட் சென்னைக்கு வரும் முன் ஜனனிக்கு யார் மீதாவது காதல் இருந்திருந்தால்....
அப்படி ஏதாவது இருந்திருந்தால் ஜனனி நிச்சயம் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள்.