(Reading time: 12 - 24 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

திருமணத்திற்குள் இன்னும் எத்தனை இரகசியங்கள் புதையுண்டு கிடைக்கிறதோ என்று சொல்ல அஸ்... எந்த ரகசியமும் இல்லை கொஞ்சம் அதிகமாக தனா அண்ணா மீது அக்கறை எடுத்துக் கொண்டேன் அவ்வளவுதான். எனக்காக எல்லாவற்றையும் நீங்களே பார்த்து பார்த்து செய்யும் பொழுது உங்களுக்காக இந்த ஒன்றை நான் செய்ய மாட்டேனா.. இனி தனா அண்ணாவின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்ல தேங்க்யூ ஸ்வீட் ஹார்ட் என்றான். இருவரும் பார்ட்டி ஹாலுக்கு சென்றனர்.

சந்தியாவிற்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. விளையாட்டாக ஜனா என்று பெயர் வைத்து ஜனனியை கிண்டல் செய்ததும் அதோடு அவர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டு அவளை நச்சரித்ததும் நினைவிற்கு வந்தது.

இதுவரை ஜனனி விருப்பப்பட்டது போல ஒருவன் நேரில் வருவான் என்று சந்தியா ஒரு நாளும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அவள் கண் முன்னே அவனைப் பார்த்துவிட்டாள்.

அதோடு அவனை ஜனனிக்கு வரப்போகும் கணவனாக பார்த்தது கூடுதல் அதிர்ச்சி ப்ளஸ் சந்தோஷத்தை கொடுத்தது.

அவள் சந்தோஷத்தை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஜனனியை காண வந்தவள் எந்த ஒரு அதிகப்படியான ஒப்பனையும் இல்லாமல் தேவதையாக ஜொலித்த ஜனனியை கட்டிப் பிடித்து முத்தமிட்டாள். அவள் விழிகளின் ஓரத்தில் நீர்க்கட்டி கொண்டது.

 சிறிது நேரம் முன்பு வரை கோபத்தோடும் ஆதங்கத்தோடும் சுற்றி வந்தவள் இப்பொழுது எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று நினைத்த ஜனனி, ஹேய்... சந்தி ஏன் இவ்வளவு உற்சாகம்... உன் ஆளை கண்டுபிடித்து விட்டாயா... என்று கேட்க குறும்பாக கண்சிமிட்டிய சந்தியா ஆம் என்று தலை அசைத்தாள்.

அப்படி என்றால் சசிதரன் வந்திருக்கிறானா என்று நினைக்கும் போதே அவளுக்கு ஒரு உற்சாகம் பிறந்தது. சசிதரனை அழைக்க வேண்டுமென்று ஜனனி விரும்பினாள். ஆனால் அவனை அழைத்தால் சந்தியாவிற்கு பிடிக்காது என்பதால் விட்டுவிட்டாள். இவ்வளவு நாள் பேசிக் கொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது பேசி விட்டார்களா... ஆனால் சசி என்னிடம் சொல்லவில்லையே என்றுயோசித்துக் கொண்டிருக்க அதற்கு மேல் யோசிக்க விடாமல் அவளை அழைத்துச் செல்ல ஸ்வீனா வந்திருந்தாள். 

இவ்வளவு நேரம் மனதிற்குள் இருந்த அமைதி பறந்து ஒரு கலக்கமும் நடுக்கமும் பிறந்தது ஜனனிக்கு.

வெறும் பார்மாலிட்டிக்கு நடைபெறும் திருமணம் என்றாலும் சந்தியா எழுப்பிய சந்தேக

10 comments

  • Good morning dear Jeba! மூப்பின் காரணமாக, படித்துப் புரிந்துகொள்ள அதிக நேரம் ஆகிவிட்டது. ஆமாம், பல தொடர்கள், கவிதை, ஜோக்ஸ், ஒரே நேரத்தில் அற்புதமாக எழுதுகிற தங்கள் திறமை இறைவனின் பரிசு! தன் பலன் எங்களுக்கே! பிரமாதம்!
  • Pk2 is doing too much steam Sandhu pathi inoru vaati thappa sonnaru 👊👊👊👊😜 <br />Janu, dhana yarunu theriyama ready anangala :eek: this shows her love towards Thanu but indha pk oda understanding sari illaye....but azhagai rasiparam 😁😍 interesting update ma'am 👏👏👏👏👏👏 sweena is also aware of janu....waiing for the fb.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.