நான்காவது பந்தை சுழல் முறையில் சற்றே மேலெழும்புமாறு வீச அது வீராங்கனையின் மட்டையின் ஓரத்தில் பட்டு கேட்சிற்கு சென்றது....
அடுத்த பந்து சுழல் முறையில் full-toss, எதிரணி வீரர் தூக்கி அடிக்க இம்முறை லாங்-ஆனில் நின்ற துளசி லட்டு போல கேட்ச் பிடித்தாள்...
கடைசி பந்து.... மூன்று ரன்கள்.... ஒரு விக்கெட்... மைத்திக்கு hat-trick விக்கெட் தருணம் ....
பார்வையாளர்களும், வர்ணனையாளர்களும் சீட்டின் நுனியில் இருந்தனர்... மைத்தியின் இல்லத்தில் அனைவரும் ஒன்றாக முற்றத்தில் அமர்ந்து வானொலியில் வர்ணனை கேட்டுக்கொண்டிருந்தனர்... காமாட்சி பாட்டியும், கற்பகம் பாட்டியும் அனைத்து கடவுளுக்கும் இந்தியா வெற்றி பெற நேர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்... கற்பகம் பாட்டிக்கு இங்கிலாந்து மீதான கூடுதலான வன்மத்தில் எக்ஸ்ட்ரா வேண்டுதல்கள் வேறு....
கடைசி பந்தை எறிவதற்கு முன்னால் மைத்திக்கு ரகுவே கண்ணிற்கு வந்தான்....
ஆஸ்திரேலியா கிளம்புவதற்கு முன் அவனை சந்தித்த போது அவன் கூறியதே நினைவில் வந்தது... டெல்லியில் இருந்த புகழ்பெற்ற மலை மந்திர் கோவிலிலிருந்து பிரசாதத்தை மைத்தியிடம் கொடுத்து அங்கு கொடுத்த கயிறை மைத்தியின் கையில் கட்டியபடியே ரகு மைத்தியிடம் பேசினான்....
“மைத்திம்மா அர்ஜுனனுக்கு வில்லுலேர்ந்து அம்பு எய்யும்போது, தாக்கவேண்டிய குறியைத் தவிர வேற எதுவும் தெரியாதாம்... நீயும் அப்படித்தான் இருக்கணும்... எதிராளியோட bat பொசிஷனும், ஸ்டம்ப்பும் மட்டும்தான் தெரியணும்.... மத்த எதையும் யோசிக்காத... யார் பேசறதும் உன் காதுல விழக்கூடாது... இத்தனை நாள் நீ விளையாடினதோ ஜெயச்சதோ பெருசில்லை... இந்த உலகக்கோப்பை போட்டிதான் பெருசு... இந்தியா இதுவரை விளையாடின உலகக்கோப்பை போட்டி ஒண்ணுல கூட அரையிறுதிக்கு கூட வந்ததில்லை... இந்த முறை கண்டிப்பா ஜெய்க்க ட்ரை பண்ணனும்... அதுவும் நீ நன்னா விளையாடி இந்தியா பேரைக் காப்பாத்தணும்.... வெற்றியோட நீ வரும்போது உன்னோட ரகுண்ணா உனக்காக ஏர்போர்ட்ல மாலையோட வெயிட் பண்ணுவேன்....”
என்று கூறியதை நினைத்தவள் நேராக ஸ்டம்ப்பை குறிவைத்து அடுத்த பந்தை சற்றே அளவு குறைவாக வீச, முதலிரு பந்துகள் வேகமாக வந்ததால் இந்தப்பந்தும் அப்படியே வரும் என்று எதிர்பார்த்த எதிரணி வீராங்கனை மட்டையை அடித்து வீச பந்து மட்டையில் படாமல் ஸ்டம்ப்பில் பட கில்லி எகிறியது.... இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறை உலகக்கோப்பையை வென்றது....
அவ்வளவுதான் இந்திய வீராங்கனைகள் மைத்தியை தூக்கி சுற்ற ஆரம்பித்து விட்டார்கள் ....