இந்த இடத்துல நின்னு பேசிண்டு இருக்கேன்னா அதுக்கு மிக முக்கிய காரணம் என் குடும்பம்தான்.... என் ஒருத்தியோட சாதனையில் பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அத்தனை பேரின் பங்கும் இருக்கு... முதலில் பெண் என்பதால் என்னை தனியாக ஒதுக்காமல், என் திறமை அறிந்து என்னை ஊக்குவித்த என் அண்ணாக்கள், மிக மிக ஆச்சாரமான குடும்பமென்பதால் விளையாட்டுக்குத் தடை வந்தபோது எனக்கு ஆதரவாக பேசியது என் ரகுண்ணா.... அவர் அன்று பேசியிராவிட்டால் உங்கள் முன்னால் மைத்தி இல்லை... அதே போல் மற்றவர்களும் தாங்கள் விளையாடும் சிறிய மேட்சோ, பெரிய மேட்சோ எதுவாக இருந்தாலும் தங்கள் நண்பர்கள் கிண்டல் பண்ணினாலும் விடாமல் கூட்டிக்கொண்டு அலையும் அண்ணாக்கள் எங்கு கிடைப்பார்கள்....
அடுத்து எத்தனை பணக்கஷ்டம் இருந்தாலும் தன் பெண்ணின் கனவு முக்கியம் என்று ஆதரித்த பெற்றோர், தங்களுக்கு பிடிக்காவிட்டாலும், பேத்தி மனம் சுணங்கி விடக்கூடாது என்று கூட நிற்கும் தாத்தா, பாட்டி.... மாமா, மாமிகள்...
இவர்கள் எல்லாரையும் விட வீட்டின் அறையை விட்டே வெளியில் வராமல் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாத என் காமாட்சி பாட்டி, என் ஒருத்தியின் கனவுக்காக தன் விரதத்தை விடுத்து எனக்காக பணம் சேர்க்க வெளியுலகத்திற்கு வந்தது... தன் மகன் படுத்துவிட்டான் என்றபோது கூட எடுக்காத முடிவை, எங்கே நான் விளையாடுவதை நிறுத்தி விடுவேனோ என்ற பயத்தில் எடுத்தார்....
இப்படி ஒட்டுமொத்த குடும்ப ஆதரவு இல்லாமல் என்னால் இந்தளவு முன்னேறி இருக்க முடியாது... இவர்கள் தவிர பாஸ்கர் சார், கண்ணன் சார்... இருவருமே தங்கள் பெண் போல என்னை பாவித்து என்னோட முன்னேற்றத்தில் உதவி புரிஞ்சாங்க...
இப்போ அதே ஆதரவை என் தமிழ்நாடு கோச்சும், இந்திய அணி கோச்சும் தர்றாங்க... அவர்களுக்கும் நன்றி....
நான் இதை பார்க்கறவங்களுக்கு சொல்றது ஒண்ணே ஒண்ணுதான்.... உங்கள் குழந்தைகளின் கனவு அது சின்னதோ, பெரிசோ அதை நிறைவேற உங்க ஒத்துழைப்பை கொடுங்க... உங்களுக்கு ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், அந்தக் குழந்தைக்கு என்ன ஆசைன்னு கேட்டு அது நியாயமா இருந்தா கண்டிப்பா நிறைவேத்துங்க... அப்படி செஞ்சீங்கன்னா ஒவ்வொரு வீட்டிலுமே மைத்திக்கள் உருவாவார்கள்...
அதே போல் அப்படி குடும்ப ஆதரவு கிடைத்தால் நீங்க உங்களோட நூறு சதவிகித உழைப்பை போடுங்க... அது எந்தத் துறையா இருந்தாலும் நான் சாதிப்பேன் அப்படிங்கற உத்வேகத்தோட உங்களோட முழு திறமையை போடுங்க... சாதனை என்பது ஒரே நாளில் வராது... அதற்கான