அனைவருக்கும் ஆச்சரியம் தான் இவர்கள் நட்பு.
கோப முகத்துடன் உள்ளே வந்து கார்த்திக்கை பார்த்து கதிருக்கு ஆச்சர்யம் தான். ஏனென்றால் கார்த்திக் அவ்வளவு எளிதில் கோபம் கொள்ள மாட்டான் அவனையே கோபம் கொள்ள செய்தது எது.
டேய் மச்சான் என்னடா........
என்ன.........
ஓய் உன்ன நான் குப்தா கம்பெனிக்கு ஆர்டர் எடுக்க தான் அனுப்பினேன். இங்கே என்னடா பண்ணிட்டு இருக்க........
அப்படி வந்ததுனால தான பல விஷயம் தெரிஞ்சது.
என்ன விஷயம் உனக்கு தெரிஞ்சது.
அது உனக்கு எதுக்கு.
ஏ லூசு எதுக்கு வந்ததிலிருந்து சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்க...
சம்பந்தப் படுத்த முடியாமல் தான் பேசிட்டு இருக்கேன்.
சரி ஓகே நீ ரூம்ல ரெஸ்ட் எடு நான் போய் எலுமிச்சம்பழம் எடுத்துட்டு வந்துடுறேன்.
கோபத்தினை கைவிட்டவன் குழப்ப ரேகையுடன் நண்பனை நோக்கி எலுமிச்சம்பழம் எதுக்கு.
உனக்கு தான் மச்சான். கொஞ்சம் மரகளண்ட மாறி பேசிகிட்டு இருக்கியா அதுதான் எலுமிச்சம் பழத்தை ரெண்டா வெட்டி உச்சந்தலையில் வைத்து நர நரனு தேச்சா எல்லாம் கிளியராயிடும் மச்சான்.
கொலைவெறியுடன் கார்த்திக் கதிரை நோக்க.....
கதிர் விழுந்து விழுந்து சிரிக்க,
ஆட்களை உள்ளே அனுப்பலாமா என்று கேட்க வந்த அனிதா.......தன்னவனின் சிரிப்பில் அவனை ரசனையுடன் நோக்கிக்கொண்டு இருக்க......
கதிருக்கு உள்ளுணர்வு ஏதோ தோன்ற திரும்பி கதவை பார்க்க......
அனிதாவை பார்த்தவன் சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டான். என்ன வேணும்.
சார் ஆட்களை அனுப்பலாமா....
எஸ் என்றவன் கம்பீர குரடலுடன் கூற.....
வாடிய முகத்துடன் அவளும் சென்றுவிட்டாள்.
அவளைப் பார்த்த கார்த்திக்கிற்கே மிகவும் பாவமாக இருந்தது. ஏன்டா இப்படி பண்ற அவ பாவம் தானே.