(Reading time: 7 - 14 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

அள்ளி விட்டிருக்க மாட்டோம். செஞ்சிட்டோம்என்ன பண்றதுதலையை குற்றம் செய்தவர்போல தொங்க போட்டுக் கொண்டு சொன்னார்.

கணவர் தலைகுனிவதை காண பொறுக்காத பூரணி…

"விடுங்கநீங்க சொன்ன மாதிரி மித்ரனிடம் பேசுங்க. அதுவரை நான் அல்லு மிஸ்ஸிடம் மாப்பிள்ளை பேரை சொல்லாமல் இருக்கேன்"

"நான் இப்பவே போய் பேசறேன்" என்று எழுந்தார். மித்ரனுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து தோட்டத்திற்கு வர சொன்னார்.

இரவு நேரத்தில் அப்பா  எதற்காக அழைக்கிறார் என்ற யோசனையுடன் மித்ரன் தோட்டத்திற்கு சென்றான்.

"வாப்பாஒரு முக்கியமான விஷயத்தை உன்னிடம் சொல்ல வேண்டும்' என்றவர் சொன்ன விஷயம் அவன் தலைக்குள் ஊடுருவி மூளையை கொத்தி போட்டது. இங்கே என்ன நடக்குது…?

'இவர் என்ன சொல்றார்மயூரியை நான் காதலிக்கனுமா?. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கனுமா?'

 இதைவிட மோசமான விஷயம் அவன் வாழ்க்கையில் இதுவரை நடந்ததில்லை. அவன் படித்த படிப்பென்னவகிக்கும் பதவி என்னஇப்படி சொல்லிட்டாரே என்று கவலையுற்றான்.

"டாட்எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதிலும் கல்யாணம் பண்ணிக்கற எண்ணமே இல்லைஅதிலும் மயூரி மீது எனக்கு நல்ல ஒபினியனே இல்லை. அவளை நீங்களா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னால்கூட செய்ய மாட்டேன். இதுல அவளை துரத்தி துரத்தி காதலிச்சு கல்யாணம் செய்யனுமாஎன்னை பார்த்தால் முட்டாள் மாதிரி தெரியுதா?"

"மயூரிக்கு என்ன குறை?"

"டாட்சின்ன பசங்கதான் அழகு லட்சணம் என்று பார்த்து செய்வாங்கஆனால் நீங்க இப்படி செய்ய கூடாது…  அவளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?. ஒரே சந்திப்பில் அவளை நல்லவனு நம்பிட்டீங்களா…"

"நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். ஒருத்தரை எடைபோட ஒரே ஒரு சரியான சந்தர்ப்பம் போதும். ஆனால் அது எப்போது வாய்க்கும்னு சொல்ல முடியாது. வருட கணக்காக பழகியும் புரியாத புதிராக

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.