வெச்சிட்டாங்க!...யாரும் என் கூடப் பேசறதும் இல்லை..பழகறதும் இல்லை!...ஏதோ என்னைய ஒரு கொலைகாரி மாதிரி நெனச்சிட்டு விலகி...விலகிப் போறாங்க!...ப்ச்...வீடே நரகமாட்டம் இருக்கு!...சில நாட்கள் வீட்டுக்குப் போகவே பிடிக்க மாட்டேங்குது!”
“நீ சொல்றது நியாயம்தான்!...ஜாலியா...”கல...கல”ப்பா இருந்த வீடு... “பொசுக்”குன்னு இருளடைஞ்ச மாதிரி ஆயிடுச்சுன்னா கஷ்டமாத்தான் இருக்கும்!..ம்ம்ம்...சரி பண்ணிடலாம் விடு!” என்றாள் சவிதா.
விரக்தியாய்ச் சிரித்த அர்ச்சனா “எப்படி?” கேட்டாள்.
“அதைச் சொல்ல மாட்டேன்...ஆனா செஞ்சு காட்டுவேன்!” என்று பொடி வைத்துப் பேசி விட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள் சவிதா.
போகும் அவளையே புருவங்களை நெரித்துக் கொண்டு பார்த்த அர்ச்சனாவிற்கு லேசாய் ஒரு அச்சம்தான் உள்ளுக்குள் ஊடுருவியது. “இவ பாட்டுக்கு “சரி” பண்ணறேன் பேர்வழின்னுட்டு எதையாவது பண்ணி இருக்கற பிரச்சினையை இன்னும் பெரிசாக்கிடாம இருந்தாச் சரி!”
தொடரும்...
Next episode will be published on 9th Jan. This series is updated weekly on Saturdays.