மதிய இடைவேளை எப்போது வரும் என்று தவித்தவள், யாருமறியாமல் ஒரு நோட்டில் அந்த சாக்லேட்டையும் ரோஸையும் வைத்துக் கொண்டு தினேஷின் வகுப்பறைக்குச் சென்றாள். அவன் வகுப்போ ஒருவருமின்றிக் காலியாக இருந்தது. ரம்யாவிற்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தாலும், காத்திருப்போம் என்று முடிவுடன் நின்று கொண்டிருந்தாள். யாரோ வரும் சத்தம் கேட்க, ஆவலுடன் பார்த்தாள், வந்தது ராபின். என்ன ரம்யா எங்க கிளாஸ் பக்கம் என்றவன், கையில் என்ன நோட்புக் என்று டக்கென்று அவள் கையில்லிருந்து அதை வாங்கிவிட்டான். உள்ளே இருந்தவற்றைப் பார்த்தவன், “நினைச்சேன், நினைச்சேன், இப்படிலாம் நடக்கும்னு நினைச்சேன். தினேஷ் ரொம்ப கான்பிடன்டா பேசிட்டு இருக்கும்போதே நினைச்சேன், இப்படி நீயும் மாறுவன்னு! நீ இவ்ளோ வீக் ஹார்ட்டட்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல.இதெல்லாம் முதல்ல நல்லாயிருக்கிற மாதிரி தான் தோணும், அப்புறம் தான் கஷ்டம் எல்லாம். முதலில் உன்னை வார்ன் பண்ணேன். இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது, நான் சொல்றதக் கேளு, இப்பவும் ஒன்னும் கைமீறிப் போகல, நீ இங்கே வந்ததை தினேஷ் கிட்ட சொல்லமாட்டேன். அவன் பௌண்டரி லேப்ல எதோ வேலை இருக்குன்னு பார்த்திட்டு இருந்தான். இப்போ வந்தாலும் வந்திருவான். அவன் வரதுக்குள்ள நீ வந்த மாதிரியே சந்தடி இல்லாம இதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு அமைதியா உன் கிளாஸுக்குப் போய்டு! எல்லாத்தையும் மறந்துட்டு ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு!” ஆவேசம் வந்தவன் போல ராபின் சொல்ல, ரம்யா சற்று மிரண்டுதான் போனாள். பதிலேதும் பேசாமல் தலைகுனிந்த வண்ணம் வெளியேறிச் சென்று கொண்டிருந்தவளை, காரிடாரின் மற்ற பக்கத்தின் படிகளின் வழியாக தன் வகுப்பை நோக்கி வந்த தினேஷ் கவனிக்க, “ரம்யா! ரம்யா!” என்று கத்திக் கொண்டே வந்தான். அதற்குள் ரம்யா சென்றுவிட்டாள். அவளை நிறுத்தலாம் என்று வேகமாக ஓடத் துவங்கிய தினேஷைப் பிடித்து நிறுத்திய ராபின், தினேஷ் நில்லு என்றான் அழுத்தமான குரலில்.
ரம்யா என்னைத் தேடித் தானே வந்தா! என்றான் தினேஷ் அவன் பிடியை உதறிவிட்டு. அவ உன்னை ஒன்னும் தேடி வரல, என்கிட்டே தான் ஒரு முக்கியமான பிரச்சினை பத்தி சொல்ல வந்தா.
என்ன பிரச்சினை? என்றான் தினேஷ் ஆவேசமாக, அவனுக்கு இணையான வேகத்துடன்.
போன்கால் பிரச்சினை! அவ வீட்டுக்கு அடிக்கடி ப்ளாங்க் கால்ஸ் வருதாம். இதனால் அவ அம்மா, அப்பா அவகிட்ட யாரு இப்படி போன் பண்றான்னு கேள்வி கேட்கறாங்களாம். அடுத்து என்கிட்டே கால் பண்ணி, அது யாருன்னு கண்டுபிடிக்கச் சொல்லப் போறாங்களாம். உண்மையிலேயே அப்படி ரம்யாவுக்குக் கால் பண்றது யாருன்னு எனக்குத் தெரிஞ்சால் ,அதுவும்