முக்கியமா அது என் பிரெண்ட் தினேஷா இருந்தால், அவங்களைத் தயவு செய்து இந்த மாதிரி எனக்குப் போன்கால் பண்ண வேண்டாம்னு சொல்லு ராபின்னு கெஞ்சிக் கேட்டுட்டுப் போறா! போதுமா? என்று சொல்லி முடித்தான்.
‘உனக்கே தெரியும்டா! நீங்க எல்லாரும் ஒர்க்ஷாப்ல இருந்தப்போ, நம்ம கிளாஸ்ல இருந்த நான் அன்னிக்கு இன்ஜினியரிங் மெக்கனிக்ஸ் கிளாஸ்ல இருந்த அவளைக் கூப்பிட்டு அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணேன். அவ நோன்னு சொன்ன பிறகு நான் அவளைத் தொந்தரவு பண்ணவேயில்லடா ராபின். எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் அவுட்டானது கூட கார்த்திக் வீட்ல இருந்து போன் பண்ணி சொல்லலாம்னு டயல் பண்ணேன், அப்புறம் அது வேணாம்னு கட் பண்ணிட்டேன்டா. என்னால் அவளுக்கு எந்த பிரச்சினையும் வராதுன்னு அவகிட்ட சொல்லிருடா. ஒரு வேளை வேற யாராச்சும் அவளுக்குக் கால் பண்ணி தொந்தரவு கொடுக்கிறாங்களோ?நானே யார் என்னனு கண்டுபிடிக்கிறேன்.!” பரபரத்தான் தினேஷ்.
நில்றா! நீ கால் பண்ணல தானே! வேற யார் கால் பண்ணா உனக்கென்ன! அது அவ பிரச்சினை! அவ அதைப் பார்த்துப்பா! நீ உன் வேலையைப் பார்றா! என்ற ராபினுக்குப் பதிலாக, “ அவ பிரச்சினை என் பிரச்சினையும் தான்டா என்று சொல்ல வாயெடுத்தவன் அப்படியே அமைதியானான். ஒரு நிமிடம் நிதானித்து யோசித்து, “ராபின் என்கிட்ட பொய் சொல்றான். நேத்து ரம்யா தான் எனக்குக் கால் பண்ணி ஒரு தடவை சொல்வாயா சாங்கைப் ப்ளே பண்ணாளே! அவளுக்கும் என்னைப் புடிச்சிருக்கு. இவனை மீறி அவ என்னோட பேச எதாச்சும் வழி இருக்கா பார்க்கணும்!” என்று நினைத்துக் கொண்டே, “ஆமா ராபின்! நீ சொல்றது சரி தான்! அது அவ பாடு!” என்று ராபினுக்கு இசைந்தே பேசினான் தினேஷ். அப்போது அவர்கள் எதிர்பாராமல் கார்த்திக் வரவும், இருவரும் என்னவென்பது போல் புருவம் உயர்த்தினார்கள்.
தொடர்வேன்
Next episode will be published on 10th Jan. This series is updated weekly on Sunday mornings.