இதுல சொன்ன சீரை செய்ய முடியாதுன்னு சொன்னா என்ன சொல்லப்போகுதோ... ஏங்க வெளிய எங்கயாச்சும் கடன் கிடைக்குமா பாருங்களேன்... கம்பெனி திறந்த உடனே திருப்பி கொடுக்கறேன்னு சொல்லிக் கேட்டுப்பாருங்க...”
“இப்போ நாடு இருக்கற நிலைல யாரும் நம்பி கடன் தர மாட்டாங்க பவானி... என்னைக்கு எல்லாம் திறக்கும்ன்னே தெரியாது... அப்படியே திறந்தாலும் பழைய மாதிரி வேலை இருக்குமான்னு தெரியாது... அப்படி இருக்கும்போது எப்படி நம்பித் தருவாங்க சொல்லு...”
“என்னங்க இப்படி சொல்லுறீங்க... இப்போ நாம அந்தம்மாட்ட என்ன சொல்ல...”
“நம்ம நிலைமைய எடுத்து சொல்லுவோம் பவானி... சொன்ன நகை மட்டும்தான் போட முடியும், மத்த சீரெல்லாம் கொடுக்க ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்கன்னு கேட்டுப்பார்ப்போம்... நாம ஒண்ணும் பொய் சொல்லப் போறதில்லை... பார்ப்போம் அதுக்கு மேல கடவுள் விட்ட வழி....”, என்ற திவ்யாவின் தந்தை மாப்பிள்ளை வீட்டிற்கு விவரத்தை சொல்ல கைப்பேசியில் அழைத்தார்...
லக்ஷ்மி மோரைக் கலக்கி எடுத்து வந்து பார்க்கும்போது ரங்கன் நாற்காலியில் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் இருந்தார்... அவரின் நிலையைப் பார்த்தவுடன் லக்ஷ்மிக்கு பதறி விட்டது... தட்டி எழுப்பி, தண்ணீர் தெளித்து என்று பலவித உபச்சாரணைகள் செய்த பிறகும் அவருக்கு முழிப்பு வரவில்லை...
என்ன செய்வதென்று தெரியாமல் உடனடியாக தன் அண்ணனிற்கு தொடர்பு கொண்டாள்...
“அண்ணா.... அண்ணா....”
“என்னாச்சு லக்ஷ்மி... எதுக்கு அழற...”
“அண்ணா அப்பாக்கு என்னாச்சுன்னு தெரியலை... திடீர்ன்னு மூச்சு பேச்சில்லாமல் மயங்கிட்டார்....”
“எப்படித் திடீர்ன்னு ஆகும்... BP ஜாஸ்தியாய்டுத்தா தெரியலையே... தண்ணி தெளிச்சு எழுப்பி பார்த்தியா....”
“எல்லாம் பண்ணிடேண்ணா.... ஆனாலும் எழுந்துக்க மாட்டேங்கறார்....”
“சரி அழாத... இப்போதான் நீ தைரியமா இருக்க வேண்டிய நேரம்... மொதல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு அழைச்சு அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போ... நேரத்தை வீணாக்காத....”
லக்ஷ்மி ஆம்புலன்ஸை அழைக்க ஆரம்பித்தாள்.... தொடர்ந்து பத்து நிமிடங்கள் முயன்றும் அவளுக்கு லைன் கிடைக்கவில்லை...
“அண்ணா லைனே போக மாட்டேங்கறது....”
“சரி லக்ஷ்மி... டைம் வேஸ்ட் பண்ணாத வெளில போய் யாரானும் இருந்தான்னா அவாளை கூட்டிண்டு வந்து பாரு... அப்பாவை இப்படி ரொம்ப நேரம் மயக்கத்துலையே வச்சிருக்கறது