(Reading time: 9 - 17 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

மாட்டார்கள் என்று நினைத்தேனோ அவர்கள் எளிதாக தூர எறிந்து விட்டார்கள். நான் செய்த தவறை கோர்ட்டில் ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்.. வெளியே வரும் போது டாக்டர் சத்யாவாக அல்ல.... மல்லிகாவின் கணவன் சத்யாவாக வருவேன் என்று உணர்ச்சி பொங்க கூற விசிட்டர் நேரம் முடிந்தது... வெளியே செல்லுங்கள் என்று காவலர் விரட்ட வெளியே வந்தாள் மல்லிகா...

வாழ்வே சூனியமாக தோன்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க அவள் கையில் இருந்த அலைபேசி ஒலி எழுப்பியது.

அழைப்பது கார்த்திக் நண்பன் சங்கர் என்று தெரிந்தும் அழைப்பை ஏற்றவள் அங்கு நடந்ததை சொல்லி முடித்தாள். சொல்லி முடிப்பதற்குள் பல நேரம் அவள் குரல் தடுமாறியதை உணர்ந்த சங்கர்... ஆன்ட்டி... கார்த்திக் அவன் ராகவ் பெயரில் ரன் செய்த கம்பெனியை கார்த்திக் பெயரில் மாற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டான்... இப்போது அது முடிந்து கார்த்திக் பெயருக்கு மாறி விட்டது. அவன் உங்களிடம் பத்து இலட்சத்திற்கான செக்கை தர சொல்லி என்னிடம் தந்து இருந்தான். நான் அதை குயிலி இருந்த அறையில் உள்ள டேபிளில் வைத்து இருக்கிறேன். பயன்படுத்தி கொள்ளுங்கள். மாதா மாதம் உங்களுக்கு ஒரு தொகையை தந்து விடுவதாகவும் கார்த்திக் சொல்லி இருக்கிறான் என்றான்.

என் மேல் அவனுக்கு இருக்கும் அக்கறை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் என்னால் அந்த பணத்தை வாங்கி கொள்ள முடியாதுப்பா...

ஏன் அப்படி சொல்றீங்க...

நான் பணத்துக்காக என் சத்யாவை காட்டிக் கொடுக்கவில்லை. அவர் செய்ற தப்பை விட்டு விட்டு மனிதனாக மாற வேண்டும் என்று தான் அவர் செய்த தவறை எல்லாம் உங்களிடம் சொன்னேன். என் பையனுக்கு வேலை கிடைக்க உதவி செய்து விட்டான். என் மகள் படிப்புக்கும் உதவி செய்து விட்டான். அது போதும்... இனி பணமோ பொருளோ உதவியோ எனக்கு தேவையில்லை. என் சத்யா மனம் மாறி திரும்ப என்னிடம் வந்தால் அது போதும். அந்த நாளுக்காக இல்லை இல்லை... அந்த வருடத்திற்காக காத்திருக்கிறேன் என்றவள் அழைப்பை துண்டிக்க சேற்றில் மலரும் செந்தாமரை போன்றவள் இவர் என்றது சங்கரின் மனம்...

கார்த்திக் தன் அம்மா அப்பாவோடு தன்னை சந்திக்க வருகிறான் என்று தெரிந்ததும் குயிலிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கார்த்திக் பேச வேண்டும் என்று அவளுக்கு அழைத்த போதும் அவனிடம் பேச மறுத்ததோடு கார்த்திக் என்று தனக்கு யாரும் தெரியாது என்று சொல்லி விட்டாள்.

குயிலியின் கோபத்தை உணர்ந்த கார்த்திக் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.