நடனமாடுகிறான் என்று அவளால் உணர முடிந்தது.
தினேஷ் தனது குடும்பத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினான் அம்மா மட்டும் தான் இருக்காங்க ராணுவத்தில் பணிபுரிந்த அப்பா காலமாகிவிட, அம்மா தான் செவிலியர் பணிபுரிந்து குடும்பத்தை நல்ல முறையில் கவனிக்கிறாங்க. எனக்கு அண்ணன், இன்ஜினியரிங் மேற்படிப்பை முடித்து, உதவி விரிவுரையாளராக சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் வேலை பார்க்கிறாங்க. சொந்தக்காரங்க எல்லாரும் உள்ளூர் தான், ரொம்ப பாசமாவும் உதவியாவும் இருப்பாங்க. ரம்யா தன் குடும்பத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் போதே, தெரியும் தெரியும். உன் அப்பா கடை வச்சிருக்காங்க, அம்மா ஹவுஸ்ஒய்ப், ஒரு தம்பி, பேரு ரகு, ஸ்கூல்ல படிக்கிறான். அப்பப்போ ஊர்ல இருந்து பாட்டி வந்து உங்ககூட தங்கி இருப்பாங்க. மத்தபடி சித்தி, சித்தப்பான்னு சொந்தக்காரங்க அதே தெருவில் வேற வீடுகளில் இருக்காங்க. கரெக்டா! என தினேஷ் சொல்லவும், என்னைப் பற்றி இவ்வளவு தெரியுமா! என ரம்யா வியந்தாள். ம்! லவ் பண்ற பொண்ணைப் பத்தி தெரிஞ்சிக்காம இருக்க முடியுமா. எனக்கும் அப்படித்தான்னு நினைச்சிராத, இப்ப நீ சொல்ற வரைக்கும்உன்னைப் பத்தி உன் பெயரைத் தவிர எனக்கு எதுவுமே தெரியாது. உன்னைப் புடிச்சது மட்டும் தான் தெரியும். என் ரம்யா சொல்லவும் , பொண்ணுங்க அப்படித்தான், கண்ணை மூடிட்டு லவ் பண்ற பையனைப் பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க. பசங்க கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையோட, பேமிலில எவ்வளவு எதிர்ப்பு இருக்கும் அண்ணன் தம்பி யாருன்னு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுப்பாங்க.
ம்! என்றாள் ஒற்றை வார்த்தையில்.
ஒரே ஒரு விஷயம் கேட்கட்டுமா! உனக்கு ஏன் என்னைப் பிடிச்சிருக்கு!” என்றாள் ரம்யா
“தெரியல!உன்னை முதன்முதலில் பார்த்த நாளில் இருந்தே புடிச்சிருக்கு! ஏன்னு குறிப்பிட்டு எதைச் சொல்றதுன்னு தெரியல!இப்போதைக்கு பதில் வேணும்னா பெருசா ரெண்டு கோழிமுட்டை மாதிரி இருக்க உன் ரெண்டு கண்ணு தான் ரொம்பப் புடிச்சிருக்கு! என்றான்.
அவன் பேசப்பேச ரம்யாவிற்கு உள்ளூர உணர்வுகள் சிலிர்ப்பூட்ட, “வைக்கட்டுமா?” என்றாள்.
“ம்!” என்றான் அவனும். இருவரும் வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்தனர். ரம்யாவிற்கு பயமும் மகிழ்ச்சியும் சேர்ந்த ஓர் புதுவித உணர்வாயிருந்தது.
அடுத்த நாள் மாலை, தேவியும் ரம்யாவும் கல்லூரி வளாகத்தில் ஒரு மரத்தின் கீழ் உள்ள கல் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே வந்த தினேஷ், மடித்த வெள்ளை சார்ட்தாள்களைக் கொண்டுவந்து அவளிடம் நீட்டி, நீ இன்ஜினியரிங் டிராயிங்ல மார்க்ஸ் கம்மியா வாங்குவியாமே. என்னோட ஒர்க் பார்த்து பண்ணு. அப்படியே நான் முடிக்காமல் வச்சிருக்கதையும் நீயே கம்ப்ளீட் பண்ணிடு.ரம்யாவின் கரத்தில் திணித்து விட்டுப் மாறாத