(Reading time: 8 - 16 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 11 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

ன்ன கார்த்திக்? என்னடா எங்க ப்ளாக் வந்திருக்க? இந்நேரம் கண்மணியைப் பார்க்கப் போவியே? என்றான் தினேஷ்.  கண்மணியோட சண்டை டா! என்றான் கார்த்திக் சலிப்புடன். என்னடா இப்ப தானே ஒரு சண்டை போட்டீங்க. அதுக்குள்ள மறுபடியுமா? என்றான் ராபின். கண்மணி கிட்ட பேசிட்டு இருந்தேன் டா, வேணும்னே வம்புக்குன்னு என்னோட கிளாஸ் கேர்ள்ஸ் வந்து சேர்ந்து நின்னுட்டு பேச ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க போனதும் கண்மணி நல்லா புடிச்சிகிட்டா, லேப் வொர்க்ல சேர்ந்து ஹெல்ப் பண்ணதுக்கு நீ பொசசிவா சண்டை போட்ட. நீ மட்டும் எல்லார்கிட்டயும் கடலை போடுற அது இதுன்னு கத்திட்டுப் போய்ட்டா. எப்படி சமாதானம் பண்ணவோ புலம்பிய கார்த்திக்கிடம், ஹே நாளைக்கு அவளே சரியாகிடுவா! லூஸ்ல விடுறா!  வா ஈவ்னிங் எதாச்சும் மூவி போவோம். அரியர் வச்சதை நாம கொண்டாடலியே இன்னும் என்றான் தினேஷ். பார்த்தியா தினேஷ், லவ்வுனாலே பிரச்சினைதான், இவங்க ரெண்டு பேரையும் பார்க்கிறோம். எப்பப் பார் வீட்ல சண்டை, இல்ல இவங்க ரெண்டு பேருக்கே சண்டை. இதெல்லாம் தேவையான்னு உன்னை ரம்யா பின்னாடி சுத்தாதன்னு சொல்றேன். “சரி நண்பா! நீ சொன்னா சரிதான்! என்றான் தினேஷ்

ராபினுக்குத் தான் இப்படி இருப்பது துளியும் பிடிக்கவில்லை. நண்பனின் காதலுக்கு உதவுவதா, உறவுபெண்ணின் காதலைத் தடுப்பதா, எது சரி என்றே புரியவில்லை. இருவரையும் எந்த எல்லை வரை தன்னால் தடுத்து வைக்க முடியுமென்றும் புரியவில்லை. இருவரும் தான் சொன்னதை உண்மையில் கேட்பார்களா, இல்லை காற்றில் பறக்க விடுவார்களா என்று ஒரே குழப்பமாக இருந்தது. இந்த மண்டையிடிலாம் நமக்குத் தேவையா என்று வேறு நினைத்துக் கொண்டவன், படத்துக்குப் போனால் தனது சிந்தனைகள் மாறும் என்று நினைத்தான். அவனும் மூவி போக சம்மதம் சொல்ல,  பேச்சு மாற ஆரம்பித்தது. கார்த்திக் கிளம்பவும் அடுத்துள்ள வகுப்புகளின் அசைன்மென்ட்கள், ப்ராஜெக்ட்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

மாலையில் ராபின் அருகில் இல்லாத சமயத்தில், “இன்னிக்கு பிப்ரவரி 14, பச்சை சட்டை போட்டு வந்த சிலபேருக்கு ஒர்க் அவுட் ஆகிருச்சு. ரெட் போட்டு வந்த எனக்கு தான் ஒன்னும் நடக்கல. ரம்யா கிளாஸுக்கு வந்திருந்தாடா. என் கெட்ட நேரம், ராபின் தான் அங்கே இருந்தான். என்ன சொன்னானோ தெரியல அவ என் கிளாஸ்ல இருந்து வெளில போய்ட்டு இருக்கும் போது தான் நான் வந்தேன். அவன்கிட்ட கேட்டா ப்ளாங்க் கால் வருதுன்னு கம்ப்ளைன்ட் பண்ண வந்தான்னு சொல்றான். நம்பவே முடிலடா!” என்று கார்த்திக்கிடம் சொல்லிட்டு இருந்தான் தினேஷ். கண்மணி வேற என் மேல கோபமா இருக்கா, இல்லாட்டி அவகிட்டயாவது உடனடியா என்னனு கேக்கலாம் என்ற கார்த்திக்கிடம், இது கண்மணிக்கே தெரியுமோ என்னவோ, சரி பார்ப்போம்டா. எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் ரம்யாவை உயிருக்கு உயிரா நேசிக்கறது உண்மை. என்

4 comments

  • :dance: Finally green signal vandhachi ini yavdhu arrears ellam vaikamal padinga pa padinga :yes: Ramya kk irundhalum thairiyam than but how long will this continue :Q: interesting update ma'am 👏👏👏👏👏 ini story eppadi pogumnu parka waiting.<br />Thank you.
  • :Q: thevi moolama edhavathu pirachinai varuma? :clap: nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.