என்னவென்றால் வந்தவர்கள் அனைவரும் பள்ளி மாணவ மாணவிகள்.
நம் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது படிக்கின்ற வயதில் காதல் என்ற பெயரில் இப்படி கூத்தடிக்கின்றனர். இளமையின் வேகமோ??? பள்ளி படிக்கும் வயதில் என்ன தெரியும் இவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றி, இந்த காலத்தில் அனைத்து மாணவர்களும் புத்திசாலிகள் தான் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால் இந்த வயது எதையும் செய்யும் தைரியம் இருக்கும் வயது அல்லவா, இந்த வயதில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் நம் வாழ்க்கைக்கும் கண்டிப்பாக சம்பந்தம் இருக்கும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் இவ்வயதில் இருந்து ஆரம்பமாகிறது. அப்படிப்பட்ட இவ்வயதில் நம் குறிக்கோள்கள் சாதிக்கும் நோக்கில் எடுத்து வைத்தால், வாழ்க்கையின் பாதையே மாறிவிடும். இந்த அருமையான வயதை இப்படி காதல் என்று கூறி தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இது கடவுளுக்கே வெளிச்சம்.
மன்னித்துவிடுங்கள் கதையினை தொடராமல் எங்கோ சென்று விட்டேன் என்று நினைக்காதீர்கள், இது என்னுடைய ஆதங்கம். அதை எழுத்தில் கொட்டி விட்டால் சிறிது நிம்மதி கிடைக்கும். சரி வாருங்கள் கதையை தொடர்கிறேன்.
அவன் இந்த 5 கேபினையும் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டே, அவளை ஒரு நாற்காலியில் அமர வைத்து இருந்தான். அங்கிருந்த பேரரை அனைத்து காதுக்குள் ஏதோ கூறி கையில் இருபது ரூபாயை தினித்தான். அவரும் சிரித்த முகமாக தான் பார்த்துக் கொள்வது போல் செய்கை செய்தார்.
இவை அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி, பேரரிடம் பேசிய பின் அவள் கை பிடித்து அழைக்க..... ஏதும் கூறாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு அவளும் சென்றாள்.
அந்த உணவகத்தில் அடுத்த ப்ளோரில் இதுபோன்ற இரு கேபின்கள் உள்ளது. அதில் ஒன்று காலியாக உள்ளதாக பேரர் கூறினார். அங்குதான் அவளைக் கூட்டிச் சென்றான்.
இருவர் மனம் விட்டு பேசுவதற்கு ஒரு இடம் கிடைக்காமல் என்ன ஒரு அலைச்சல்.
(தவறு செய்பவர்களைக் எல்லாம் இது போன்ற இடங்கள் சுலபமாக சிக்கிவிடுகிறது)
எதிரெதிர் இருக்கையில் அமர்ந்தவர்கள். யார் முதலில் ஆரம்பிப்பது என்று இருவருக்குள்ளும் சிறு தடுமாற்றம்.
அவனே ஆரம்பித்தார் என்னாச்சுங்க... இப்புடி இருக்கீங்க... என்று வலியோடு வந்து விழுந்தது அவனது வார்த்தைகள்.
இதுவரை மனபாரத்தை அடக்கி வைத்தவள். அவன் கேட்ட ஒரு வார்த்தையில் அவள்