கண்களில் இருந்து கண்ணீர் மடமடவென்று கொட்டியது.
அவளுடைய கண்ணீரை கண்டவன் பதறியபடி தர்ஷீ என்று கைகளை இறுக்க பிடித்து கொண்டான்.
அழாதீங்க ப்ளீஸ் கஷ்டமா இருக்கு.
சிறு சிரிப்புடன் கண்ணீரைத் துடைத்தவள். இரு நொடி மவுனத்திற்கு பிறகு,
அம்மா இறந்துட்டாங்க கதிர்.
அவன் தர்ஷீ என்று அதிர்ச்சியடைய....
ஏனென்றால் அவள் அம்மா அவருக்கு எவ்வளவு முக்கியம் என்று அவனுக்கு மட்டுமே தெரியும், எவ்வளவு அன்பு வைத்திருந்தாள் என்பது அவள் சொல்லாமலேயே அவன் புரிந்து கொண்டான். அவளுடைய அந்த அன்புக்காக தான் அவன் இத்தனை நாளும் அவளுக்காக காத்திருந்தது.
அவன் தொண்டையில் வார்த்தைகள் வர மறுத்தன கஷ்டப்பட்டு,
எப்படிங்க.....
ஹார்ட் அட்டாக்... அது ஆச்சுங்க இரண்டு வாரம்.
அவள் குரல் சாதாரணமாகத்தான் வந்தது. ஆனால் அதிலுள்ள வலி அவனுக்கு தெரிந்தது.
அவளே தொடர்ந்தாள், அப்பா சொந்தமெல்லாம் வந்து சேர்ந்துடுச்ச கதிர்- என்ன இனி அவங்கதான் பாத்துக்க போறாங்களாம் கதிர்.
நான் பொறந்தப்போ வராதவங்க... எங்க அப்பா இறந்தப்ப கூட வராதவங்க... இப்போ வந்து இருக்காங்க. ஆனாலும் எனக்கு சந்தோஷம்தான் கதிர்' ஆனா அவங்க என்ன நோக்கத்தோடு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சதும் மனசு கசந்து போச்சு.
ஏங்க என்னாச்சு .....
என்ன அப்பா சொந்தத்துல ஒருத்தவனுக்கு ரெண்டாம் தாரமா கட்டி வைக்க பார்க்குறாங்க. அப்ப கூட நமக்கு நல்லதுதான் பண்ணுவாங்கன்னு ஓகே தான் சொன்னேன்.
அவன் அவளை அடிபட்ட பார்வை பார்க்க,...
அப்படி பார்க்காதீங்க கதிர் இப்பவும் எனக்கு கல்யாணத்தை பத்தி எந்த ஒரு எண்ணமும் இல்லை. ஒத்த புள்ளையா வளர்ந்ததாக சொந்தத்தோட வாழனும்னு ஆசை. ஆனா எனக்கு அதுக்கு குடுத்துவைக்கல. எனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க தெரியுமா கதிர்.
அம்மா அப்பா இல்லாத ஒரு பொண்ண கல்யாணம்-ன்ற பேர்ல கூட்டிவந்து கொடுமைப்படுத்தி அவனே அவளைச் சித்திரவதை பண்ணி கொன்னுடானா, இப்பதான்