போட்டோவும் போட்டிருந்தாங்களே?” என்றாள் கோகிலா.
“அடப்பாவிகளா....“போட்டோ போட வேண்டாம்”ன்னு பல தடவை சொல்லிட்டேன்!...கேட்க மாட்டேங்கறானுக!...மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருக்கர எனக்கு அதெல்லாம் ஏதோவொரு வித்த்துல தொந்தரவு”
“அதனால் என்ன சார்?...நான் ஒரு பெண்...நானே தைரியமாய் போட்டோ போடறேன்..நீங்க ஏன் சார் பயப்படறீங்க?” சிரித்தபடி சொன்னாள் கோகிலா.
“மேடம்...இதுக்குப் பேரு பயம் இல்லை!...தொந்தரவுகளைத் தவிர்த்தல்!...”என்ற ரவீந்தர், “ஆமாம்...இந்த ஆபீஸ்ல யாருக்காவது நீங்க ஒரு கவிதாயினி!ன்னு தெரியுமா?” கேட்டான்.
“ம்ஹ்ஹும்...யாருக்கும் தெரியாது!....நானும் சொல்லிக்கறதில்லை” கையை உதறிக் கொண்டு சொன்னாள்.
“சரிங்க மேடம்...அந்தப் புத்தகத்தில் வர்ற உங்க போட்டோவைப் பார்த்துக் கேட்பாங்களே?” ரவீந்தர் கண் சிமிட்டிக் கேட்க,
“உண்மையைச் சொல்லணும்ன்னா...இங்க இருக்கறவங்களுக்கு சங்கொலின்னு ஒரு பத்திரிக்கை இருப்பதே தெரியாது!...அது அறிவு ஜீவீகளோட இதழ்!...” என்றாள் கோகிலா.
“ஓ.கே...உங்க கூடப் பேசியதில் ரொம்ப சந்தோஷம்...மத்தவங்களையும் பார்த்துப் பேசிட்டு அப்புறமா நேரமிருந்தா உங்க கிட்ட வர்றேன்...”சொல்லி விட்டு எழுந்தான் ரவீந்தர்.
போகும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். “ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர்...கவிஞராய் இருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்”
மாலை ஆறு மணி வாக்கில் சுதாகர்ஜியிடமிருந்து ரவீந்தரின் மொபைலுக்கு அழைப்பு வந்தது.
“என்ன ஜி?”
“வந்து...இன்னிக்கு ராத்திரி...ஒரு எட்டு மணிக்கு கோயிலுக்கு வர முடியுமா?” சுதாகர்ஜி கேட்க,
“வாட் ஜி?...எனி பிராப்ளம்?” குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான் ரவீந்தர்.
“இல்லை...இல்லை...பிரச்சினையெல்லாம் எதுவும் இல்லை!...உன் கிட்ட ஒரு ஆலோசனை கேட்கணும்” என்றார் சுதாகர்ஜி.
“என்ன சுதாகர்ஜி...நீங்க ஊரே போற்றும் ஸ்வாமிஜி...நீங்க என் கிட்ட ஆலோசனை கேட்கணுமா?...புரியலையே...........?” இழுத்தான் ரவீந்தர்.
“ராத்திரி வா!...நேர்ல பேசுவோம்”
“சரிங்க ஸ்வாமிஜி...கண்டிப்பா வந்திடறேன் ஜீ” என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்த ரவீந்தர் குழப்பமானான். “சுதாகர்ஜிக்கு என் கிட்ட ஆலோசனை கேட்கும் அளவுக்கு என்ன பிரச்சினை?...ஒருவேளை நான் அந்த ஹவ்ஸ் ஓனர் பெண்ணைப் பற்றி திரும்பத் திரும்ப பேசியது அவருக்குப் பிடிக்கலையோ?”
தொடரும்...
Next episode will be published on 22nd Jan. This series is updated weekly on Fridays.