தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 17 - ஜெபமலர்
ஜனாவின் வார்த்தைகள் ஜனனிக்குள் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால் அவனது முகத்தை பார்க்க விருப்பம் இல்லாதவளாக அவனை கண்டு கொள்ளாமல் சமையலறை நோக்கி நடந்தாள்.
அவளது பாராமுகம் அவனுக்குள் இன்னும் கோப அலைகள் வீறு கொண்டு எழ அவளைத் தொடர்ந்து நடந்தான்
சமையலறைக்குள் சென்றவள் ஏதோ ஒன்றை எடுக்க திரும்ப அவளை தொடர்ந்து வந்த ஜனாவின் மீது மோதினாள்.
எதிர்பாராத இந்த மோதலில் கீழே விழ போனவள் தன்னை விழாமல் காத்து கொள்ள கூட ஜனாவை பிடிக்காமல் அருகில் இருந்த சுவற்றை பிடிக்க முயற்சித்து தோற்றவளாக சரிய அவளை இழுத்து அணைத்து கொண்டான் ஜனா..
கீழே விழுந்ததாலும் பரவாயில்லை, உன்னை தொட மாட்டேன் என்ற ரீதியில் ஜனனி நடந்து கொண்டது ஜனாவிற்குள் பெருங்கோபத்தை ஏற்படுத்த அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தான்.
ஆனால் அவளோ அதை விரும்பாதவளாக அவன் கைப்பிடியில் இருந்த வெளியே வர முயற்சித்தாள். ஆனால் ஜனாவோ விடுவதாக தெரியவில்லை.
அவள் முகத்தை தன் முகத்திற்கு நேராக திருப்பியவன் அவளையே உற்று நோக்க பெண்ணவளோ அவன் முகம் பார்க்காமல் தன் விழிகளை தாழ்த்தி கொண்டான்.
அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்த அவள் நாடியை பிடித்து உயர்த்தினான்.
அவளோ அவன் கைப்பிடியில் இருக்க விரும்பாதவளாய் அவனை தள்ளி விட்டு அவன் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தாள்.
அவள் முயற்சி செய்ய செய்ய இடையோடு இழுத்து அணைத்து இருந்த அவன் விரல்கள் அவள் இடையை அழுந்த பற்றியது.
சிறிது விலகிய புடைவையினால் அவன் விரல்கள் அவள் மெல்லிடையை நேராக பற்றி பிடித்து இறுக்க ஒரு கையால் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் மற்றொரு கையால் இடையை பற்றி இருந்த விரல்களை அகற்ற முற்பட்டாள்.
ஆனால் அவனின் வலிமையின் முன் பெண்ணவளால் எதுவும் செய்ய முடியாமல் போக விழி உயர்த்தி அவன் விழிகளை நேராக பார்த்தாள். அந்த பார்வையில் தெரிந்த ஏளனமும் வெறுப்பும் கலந்து இருந்தது.
ஒரு நொடி நேரம் தான் பார்த்தால் என்றாலும் அந்த சலிப்பும் வெறுப்பும் ஜனாவிற்குள் எரிகிற